Kathir News
Begin typing your search above and press return to search.

எங்களுக்கு ஓய்வூதியம் வேண்டாம் அதை கடை நிலை பணியாளர்களுக்கு தாருங்கள் ! - மனதை நெகிழ வைக்கும் அருண் ஜெட்லி குடும்பத்தினர்.!

எங்களுக்கு ஓய்வூதியம் வேண்டாம் அதை கடை நிலை பணியாளர்களுக்கு தாருங்கள் ! - மனதை நெகிழ வைக்கும் அருண் ஜெட்லி குடும்பத்தினர்.!

எங்களுக்கு ஓய்வூதியம் வேண்டாம் அதை கடை நிலை பணியாளர்களுக்கு தாருங்கள் ! - மனதை நெகிழ வைக்கும் அருண் ஜெட்லி குடும்பத்தினர்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  1 Oct 2019 5:56 AM GMT


கடந்த ஆகஸ்ட் மாதம் உடல் நல குறைவால் சிகிச்சை பலனின்றி மறைந்தார் முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி. இவர் மிகவும் மனிதாபிமானம் கொண்டவர்,இவர் அமைச்சராக இருந்த சமயத்தில் தனக்கு கீழ் பணியாற்றும் ஊழியர்களுக்கு பல உதவிகளை செய்து வந்துள்ளார்.


அதுவும் கடை நிலை ஏழை ஊழியர்களுக்கு பல உதவிகளை செய்து வந்துள்ளார்.அவர்களின் குழந்தைகளின் கல்வி கட்டணத்தை முழுவதும் ஏற்று வந்துள்ளார்.


அவர் மறைந்த பிறகு அவர் வகித்த ராஜ்யசபா உறுப்பினர் பதவிக்கு ஓய்வூதியம் அவரின் குடும்பத்திற்கு வழங்குவார்கள். ஆண்டிற்கு 3 லட்சம் வரை வழங்கப்படும். இந்த ஓய்வூதியத்தை அருண் ஜெட்லி குடும்பத்தார் வேண்டாம் என கூறியுள்ளதாக செய்திகள் வந்துள்ளது. இது குறித்து துணை குடியரசு தலைவருக்கு கடிதம் எழுதி உள்ளதாகவும் அந்த கடிதத்தில் மறைந்த அருண்ஜெட்லி அவர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகை மற்றும் ஓய்வூதியம் ஆகியவற்றை 4 ஆம் நிலை பணியாளர்களுக்கு பிரித்து வழங்குங்கள் என அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.


மத்திய அமைச்சராக இருந்த போது அருண் ஜெட்லி ஆடம்பர அரசு குடியிருப்பில் இருப்பதற்கு விரும்பாமல், சாதாரண குடியிருப்பில் வசித்து வந்தது அவரின் எளிமையை காட்டுகிறது.




https://kathirnews.com/2019/10/01/mla-seat-for-bjp-volunters-party-up-by-election/


அதே போல் விழாக்கள் வந்தால் போதும் அவரிடம் வேலை பார்ப்பவர்களுக்கு புத்தாடை முதல் அணைத்து விழா செலவுகளையும் தானே முன்னின்று வழங்கி வந்துள்ளார்.


இளகிய மனம் கொண்ட தலைவரை இழந்துள்ளது இந்தியா!


Next Story
கதிர் தொகுப்பு
Trending News