Kathir News
Begin typing your search above and press return to search.

இந்து மரபும் அறிவியல் அறிவும்! இருகைக்கூப்பி நமஸ்கரிப்பது ஏன்? (1) #KathirIndic

இந்து மரபும் அறிவியல் அறிவும்! இருகைக்கூப்பி நமஸ்கரிப்பது ஏன்? (1) #KathirIndic

இந்து மரபும் அறிவியல் அறிவும்! இருகைக்கூப்பி நமஸ்கரிப்பது ஏன்? (1) #KathirIndic

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  10 Oct 2019 3:30 AM GMT


இந்து மரபின் ஆழம் ஆறிவோம்.


பிரபஞ்சத்திற்கு என ஒரு மொழியுண்டு. அது ஒரு குறிப்பிட்ட அறிவியல் விதியின் படி இயங்க கூடியது. நாம் அதை பின்பற்ற விரும்பாவிட்டாலோ அல்லது பின்பற்றாமல் போனாலோ நமக்கு முழுமையான மகிழ்ச்சி என்பது சாத்தியமற்று போகலாம். நமக்கு நேரம் துன்பம் அல்லது இடர்கள் என்பது இயற்கையின் விதியை பின்பற்றும் வல்லமை நமக்கு இல்லாது போவதாலேயே நமக்கு நிகழ்கிறது.


உலகில் இந்து மதம் ஒன்றே இயற்கையின் விதிகளை அடிப்படையாக கொண்டுள்ளது. அதனாலேயே மேலை நாடுகளில் மற்ற மதங்களுக்குள் எழுவது போல அறிவியலுக்கும் இந்து மதத்திற்கும் இடையே எந்த வித சர்ச்சைகளும் எழுவதில்லை.


ஆனால் துருதிர்ஷ்டவசமாக இந்து மதம் என்பது அறிவியல் சார்பற்றது என்றும் அது மிக அதிகமான மூட நம்பிக்கைகளை கொண்டுள்ளது என்றும் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது.


இதை கட்டுடைக்கும் வகையில் நம் இந்து மரபினில் நாம் கடைப்பிடிக்கும் அடிப்படை அம்சங்களின் அறிவியல் சாரத்தை இந்த பகுதியில் தினமொரு தலைப்பில் காணயிருக்கிறோம்.


இருகைக்கூப்பி நமஸ்கரிப்பது ஏன்?


வணக்கம். இது இந்து மரபில் மிகச்சாதரணமாக பின்பற்றப்படும் ஒரு வணங்கும் முறை. இரு கைகளைக்கூப்பி வணக்கம் அல்லது நமஸ்காரம் என்பது ஒரு மரியாதைக்குரிய உடல்மொழியாக கருதப்படுகிறது. ஒரு கோவிலுனுள் நுழைகிற போதோ அல்லது கடவுள்களை உணர்கிற போதோ வயதில் மூத்தோரை காண்கிற போதோ இவ்வாறு நாம் செய்வது வழக்கம். இருக்கைகளை கூப்பி நமஸ்கரித்தல் என்பது யோக மரபில் ஒரு வகையான முத்திரை. ஆனாலும் நாம் பெரும்பாலான நேரங்களில் நம் மரியாதையை, நன்றியுணர்வை, மேலும் பல நல்லதிர்வுகளை நாம் உணர்கிற போது நமஸ்கரித்து வெளிப்பத்துகிறோம்.


இந்த கைகூப்பி வணக்கம் செலுத்தும் முறைக்கு பின் சொல்லபடும் தாத்பரியம் என்பது நாம் வணங்குவது யாராக அல்லது எதுவாக இருந்தாலும் சரி, அது உருவில் பெரிதாகவோ அல்லது சிறிதாகவோ இருந்தாலும் சரி, அதன் சக்தி எந்த அளவில் தீவிரமானதாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் சரி நாம் வணங்கும் ஒரு உயிர் அல்லது ஒரு உயிரற்ற எதுவாக இருந்தாலும் அது இந்த உலகில் இருப்பதற்கு பின் ஒரு தெய்வீக ஆற்றல் இருக்கிறது. அந்த தெய்வீக ஆற்றலை அந்த தெய்வீக தன்மையை நாம் வணங்குகிறோம் என்பதே நாம் கைக்கூப்பி ஒன்றை வணங்க்குவதின் தார்பரியம் என பெரியவர்கள் சொல்ல அறிந்து உள்ளோம்.


ஆனால் இதன் பின் இருக்கும் அறிவியல் விஞ்ஞானம் என்பது என்ன? என்ற கேள்வி உண்டு. கைகளை இணைத்து வணங்குகிற போது ஒரு விரல் மற்றொரு விரலோடு இணைந்து ஒரு அழுத்தத்தை நரம்புகளில் உண்டாக்குகிற போது அந்த நரம்புகளுக்கு தொடர்புடைய உடல் உறுப்புகளின் மீது தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்த அழுத்தமும், தாக்கமும் நம்மை உயிர்ப்புடன் வைத்திருக்க உதவுகிறது.


மேலும் மேலை நாடுகளில் பிறரை வரவேற்க, அல்லது உணர்வுகளை வெளிப்படுத்த கைகளை குலுக்குவது வழக்கம். இந்த முறையில் ஒருவரிடம் இருக்கும் நுண்ணுயிர்கள் கைக்குலுக்குதலின் மூலம் நமக்கு கடத்தப்படும் வாய்ப்பு உண்டு. இதில் சாதகங்களை விட பாதகங்களே அதிகம் என்பதால் நமஸ்கரித்து வணக்கம் செலுத்தும் முறை அறிவியல் ரீதியாகவும் சிறந்த முறையாக கருதப்படுகிறது.


ஆன்மீக மரபில் ஒருவரை வணங்குதல் என்பது எவ்வாறு இருக்க வேண்டும் என்ற வரைமுறைகளும் சொல்லப்பட்டுள்ளது.


தலை, இரண்டு கை, இரண்டு காது, மோவாய், இரண்டு புஜங்கள் ஆகிய எட்டு உறுப்புகளும் நிலத்தில் படும்படி கடவுளை வணங்க வேண்டும். இதைத் தான் 'அஷ்டாங்க வணக்கம்' என்று கூறுவர்.


தலை, இரண்டு கை, இரண்டு முழந்தாள் என்ற ஐந்து உறுப்புகளும் நிலத்தில் படும்படி வணங்குவதற்கு `பஞ்சாங்க வணக்கம்’ என்று பெயர். ஆண்கள் அஷ்டாங்க வணக்கமும், பெண்கள் பஞ்சாங்க வணக்கமும் செய்ய வேண்டும்.


குருவை வணங்கும்போது நெற்றியில் கைகூப்பி வணங்க வேண்டும். அரசர், அதிகாரி, தந்தை இவர்களை வணங்கும்போது வாய்க்கு நேராக கைகூப்பி வணங்க வேண்டும். அந்தணரை வணங்கும் போது மார்பில் கைகூப்பி வணங்க வேண்டும். தாயை வணங்கும் போது வயிற்றில் கைகூப்பி வணங்க வேண்டும்.


இவ்வாறு வணங்குதல் எனும் ஒரு செயலின் பின் பல தாத்பரியங்களும், தத்துவங்களும், விஞ்ஞான காரணங்களும் அடங்கியுள்ளன. இந்த அறிவியல் விஞ்ஞானமும், ஆன்மீக மெய்ஞானமும் கலந்திருப்பதே இந்து மதத்தின் தனிச்சிறப்பு.


( தொடரும்..)


Next Story
கதிர் தொகுப்பு
Trending News