Kathir News
Begin typing your search above and press return to search.

தமிழகத்தின் கவனத்திற்கு பிரதமர் மோடிக்கு கோயில் கட்டி வரும் முஸ்லிம் பெண்கள்!!

தமிழகத்தின் கவனத்திற்கு பிரதமர் மோடிக்கு கோயில் கட்டி வரும் முஸ்லிம் பெண்கள்!!

தமிழகத்தின் கவனத்திற்கு பிரதமர் மோடிக்கு கோயில் கட்டி வரும் முஸ்லிம் பெண்கள்!!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  14 Oct 2019 7:52 AM GMT


உத்தரபிரதேசத்தின் முசாபர்நகர் மாவட்டத்தில் முஸ்லிம் பெண்களை கொண்ட ஒரு குழு பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு கோயில் கட்டி வருகிறது.


இந்த குழுவிற்கு தலைமை தாங்கும் ரூபி கஸ்னி, முஸ்லீம் பெண்களுக்காக பிரதமர் நரேந்திர மோடி நிறைய நல்லது செய்துள்ளார் மேலும் அவர் மிகவும் மதிக்கப்படுவதற்கு மோடி தகுதியானவர் என கூறினார்.
"முத்தலாக்கை தடை செய்வதன் மூலம் அவர் எங்கள் வாழ்வில் பெருமளவில் மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளார். எரிவாயு இணைப்புகள் மற்றும் இலவச வீடுகளையும் அவர் எங்களுக்கு வழங்கியுள்ளார். இதற்கு மேல் நாங்கள் அவரிடம் என்ன எதிர்பார்க்க முடியும்?", என மிக ஆனந்தத்துடன் கூறினார்.
மோடிக்கு உலகம் முழுவதும் பாராட்டு தெரிவிக்கப்படுவதாகவும், அவரது சொந்த நாட்டில் அவரை கவுரவிக்க வேண்டும் என நாங்கள் நினைத்து கோவில் காட்டும் முடிவை எடுத்தோம்.எங்களின்
அசொந்த சேமிப்பிலிருந்து அந்த கோயிலை கட்டி வருகிறோம் என தெரிவித்துள்ளனர்.


அதுமட்டுமில்லாமல் "முஸ்லீம் பெண்கள் பிரதமருக்கும் அவரது கொள்கைகளுக்கும் முழு ஆதரவளிப்பார்கள் என்ற தெளிவான செய்தியை நாங்கள் சொல்ல விரும்புகிறோம், அவரை முஸ்லிம் எதிர்ப்பு என்று முத்திரை குத்துவது தவறு" என கோவில் கட்டி வரும் கஸ்னி கூறினார்.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News