Kathir News
Begin typing your search above and press return to search.

ஸ்டெர்லைட் ஆலை பிரச்சனையில் சிக்கும் சீமானும் , தி.மு.க எம்.எல்.ஏ கீதா ஜீவனும்?

ஸ்டெர்லைட் ஆலை பிரச்சனையில் சிக்கும் சீமானும் , தி.மு.க எம்.எல்.ஏ கீதா ஜீவனும்?

ஸ்டெர்லைட்  ஆலை பிரச்சனையில்  சிக்கும் சீமானும் , தி.மு.க எம்.எல்.ஏ கீதா ஜீவனும்?

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  15 Oct 2019 8:57 AM GMT


கடந்த ஆண்டு மே மாதம் தூத்துக்குடி ஸ்டெரிலைட் ஆலைக்கு எதிராக சமூக விரோதிகளின் தூண்டுவதால் போராட்டம் நடத்தப்பட்டது. அப்பொழுது அந்த பொது மக்கள் கூட்டத்தில் ஊடுருவி இருந்த சமூக விரோதி சக்திகள் காவல்துறை அதிகாரிகளையும், மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தையும், ஸ்டெரிலைட் ஆலையில் உள்ள பணியாளர்களின் குடியிருப்பையும் தாக்கினார்கள். அப்பொழுது துரதிருஷ்டவசமாக காவல்துறையினர் துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டதால் 13 பேர் துரதிருஷ்டவசமாக தங்கள் உயிரை இழந்தனர்.


இந்த போராட்டம் நடந்த விதம் பற்றியும், அங்கு நடந்த சம்பவங்கள் பற்றியும், அங்கு 13 பேர் துப்பாக்கி சூட்டால் உயிர் இழந்ததை பற்றியும் ஒய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை செய்து வருகிறார். இந்த விசாரணையில் 13 கட்டம் முடிந்துள்ள நிலையில், இப்பொழுது 14 ஆம் கட்ட விசாரணை நடந்து வருகிறது.


இந்த விசாரணையில் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானுக்கும், திமுக தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் கீதா ஜீவனுக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த இந்த போராட்டத்தில் பங்கேற்று, சில சமயங்களில் போராட்டத்தை வழிநடத்தும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர். இதனால் அங்கு நடந்ததை பற்றி விளக்கம் அளிக்குமாறு இந்த பிரச்னையை விசாரிக்கும் ஒரு நபர் ஆணையம் சீமானிற்கும், கீதா ஜீவனிற்கும் உத்தரவிட்டுள்ளது. இதன் அடிப்படையில் நாளை இருவரும் விசாரணை ஆணையத்திடம் ஆஜர் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News