Kathir News
Begin typing your search above and press return to search.

போட்ட திட்டம் எல்லாம் தவிடுபொடி.! இந்தியாவின் உச்சபட்ச அதிகார மையத்துக்கே குறி வைத்த பாகிஸ்தான் பயங்கரவாதிகள்.!

போட்ட திட்டம் எல்லாம் தவிடுபொடி.! இந்தியாவின் உச்சபட்ச அதிகார மையத்துக்கே குறி வைத்த பாகிஸ்தான் பயங்கரவாதிகள்.!

போட்ட திட்டம் எல்லாம் தவிடுபொடி.! இந்தியாவின் உச்சபட்ச அதிகார மையத்துக்கே குறி வைத்த பாகிஸ்தான் பயங்கரவாதிகள்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  24 Oct 2019 1:45 PM GMT


இவ்வளவு காலம் எல்லையில் தாக்குதல் நடத்தி வந்த பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இந்திய உளவு அமைப்பான "ரா" அலுவலகம் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளனர்.


இந்தியா காஷ்மீர் விவகாரத்தை கையில் எடுத்ததில் இருந்து பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. மறைமுகமாக தாக்குதல் நடத்தி வந்த பயங்கரவாதிகளை பாகிஸ்தான் அரசே ஊக்குவித்து, இந்தியா மீது நேரடி தாக்குதல் நடத்தும் அளவிற்கு அட்டூழியம் செய்து வருகிறது.


சமீப காலமாக இந்திய உளவுத்துறையின் செயல்பட்டால், பல பயங்கரவாத தாக்குதல்கள் முறியடிக்கப்பட்டுள்ளன. இதனால் ஆத்திரமடைந்த பயங்கரவாதிகள் நேரடியாக டெல்லியில் உள்ள இந்திய உளவு அமைப்பின் தலைமை அலுவலகம் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளனர்.


இந்த மாத இறுதிக்குள் இந்த தாக்குதலை நடத்துவார்கள் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதிகள் பேசியதை இடைமறித்து கேட்கும் தொழில்நுட்பம் மூலம் ஆராய்ந்து பார்த்தததில் இந்த அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது. இதனால் வெளி மாநிலங்களில் இருந்து டெல்லிக்குள் வரும் வாகனங்கள் கடுமையான சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றன.


பயங்கரவாதிகள் பஞ்சாப்மாநில எல்லை வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவக்கூடும் என்பதால், பஞ்சாப் மாநிலத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News