Kathir News
Begin typing your search above and press return to search.

உ.பி. இடைத்தேர்தலில் 11- ல் 8 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அபார வெற்றி ! டெப்பாசிட் இழந்து 4 வது இடத்துக்கு தள்ளப்பட்ட மாயாவதி கட்சி.!

உ.பி. இடைத்தேர்தலில் 11- ல் 8 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அபார வெற்றி ! டெப்பாசிட் இழந்து 4 வது இடத்துக்கு தள்ளப்பட்ட மாயாவதி கட்சி.!

உ.பி. இடைத்தேர்தலில் 11- ல் 8 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அபார வெற்றி ! டெப்பாசிட் இழந்து 4 வது இடத்துக்கு தள்ளப்பட்ட மாயாவதி கட்சி.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  25 Oct 2019 5:47 AM GMT


கடந்த 21-ம் தேதி நாடு முழுவதும் நாங்குநேரி, விக்கிரவாண்டி 51 தொகுதிகளில் சட்டப்பேரவை இடைத்தேர்தல் நடை பெற்றது. இந்த தேர்தலில் உ.பி மாநிலத்தில் மட்டும் 11 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற்றது.


மகாராஷ்டிரா, ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையுடன் சேர்த்து 51 தொகுதிகளில் பதிவான வாக்குகளும் நேற்று எண்ணப்பட்டன.


இதில் உத்தரபிரதேசத்தில் 11 பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜக 7 இடங்களிலும், அதன் கூட்டணியான அப்னா தளம் ஓரிடத்திலும் வென்றன. எதிர்க்கட்சியான சமாஜ்வாதி கட்சி 3 இடங்களில் வென்றுள்ளது.


இந்த தேர்தலில் 6 தொகுதிகளில் காங்கிரஸ் 3-ம் இடம் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தொகுதிகளில் பகுஜன் சமாஜ் கட்சி டெபாசிட் இழந்துள்ளது. பிஎஸ்பி வலிமையாக இருந்த ஜலல்பூர் தொகுதியிலும் தோல்வியடைந்துள்ளது. ராம்பூர் தொகுதியில் கடந்த 2017-ம் ஆண்டு 25 சதவீத வாக்குகள் பெற்ற பிஎஸ்பி இடைத்தேர்தலில் வெறும் 2 சதவீத வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளது மாயாவதியை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.


உபியில் பகுஜன் சமாஜ் கட்சியின் பெரும்பாலான தலித் வாக்குகள் பாஜக மற்றும் காங்கிரசுக்கு பிரிந்து சென்று விட்டதாகவும், முஸ்லிம்கள் வாக்கு சமாஜ்வாடிக்கு பெரும்பகுதியும், காங்கிரசுக்கு ஒரு பகுதியும் சென்று விட்டதாகவும், மாயாவதி சரியான தேர்தல் வியூகம் வகுக்கவில்லை என்றும் பகுஜன் சமாஜ் கட்சின் நிர்வாகிகளே வருத்தத்துடன் கூறியதாக செய்திகள் கூறுகின்றன.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News