ராமர் கோயிலுக்காக, ரத யாத்திரை நடத்தி அத்வானியை சந்திப்பேன் சிவசேனா கட்சித் தலைவர் - உத்தவ் தாக்கரே!
ராமர் கோயிலுக்காக, ரத யாத்திரை நடத்தி அத்வானியை சந்திப்பேன் சிவசேனா கட்சித் தலைவர் - உத்தவ் தாக்கரே!
By : Kathir Webdesk
அயோத்தி நில உரிமை தொடர்பான வழக்கில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தீர்ப்பை வாசித்தார்.சர்ச்கைக்குரிய இடத்தில் ராமர் கோவில் கட்டிக்கொள்ளலாம். இதற்காக 3 மாதங்களுக்குள் மத்திய அரசு ஒரு அறக்கட்டளையை ஏற்படுத்த வேண்டும். முஸ்லிம்கள் மசூதி கட்டுவதற்கு வேறு இடத்தில் 5 ஏக்கர் நிலம் வழங்கப்படவேண்டும் என தீர்ப்பு வழங்கப்பட்டது.
இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே,இந்திய வரலாற்றில் இது ஒரு பொன்னான நாள் அருமையான நாள், இந்திய வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்க வேண்டிய நாள் என்று குறிப்பிட்டார்,அயோத்தி தீர்ப்பு தொடர்பாக தனது மகிழ்ச்சியை தெரிவித்தார்,கூடிய விரைவில் பாஜக மூத்த தலைவர் அத்வானி அவர்களை சந்தித்து நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவிப்பேன் என்று ,ராமர் கோயிலுக்காக நாடு முழுவதும் யாத்திரை நடத்தியவர் அத்வானி,நவம்பர் 24-ஆம் தேதி அயோத்தி செல்ல இருப்பதாக கூறினார்.