இராமர் கோவில் கட்ட நன்கொடை வழங்கிய முஸ்லீம் அமைப்பு தலைவர்.!
இராமர் கோவில் கட்ட நன்கொடை வழங்கிய முஸ்லீம் அமைப்பு தலைவர்.!
By : Kathir Webdesk
அயோத்தியில் ராமர் ஜென்ம பூமியில் இராமர் கோவில் கட்டலாம் என உச்ச நீதிமன்றம் வரலாற்று தீர்ப்பு அளித்தது. , இஸ்லாமியர்களுக்கு மசூதி கட்டுவதற்கு 5 ஏக்கர் நிலத்தையும் ஒதுக்குமாறும் மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. உச்ச நீதிமன்றம். ராமர் கோவில் கட்டுவதற்கு உலகம் முழுவதும் இருந்து நன்கொடைகள் வழங்கப்பட்டது. இந்த நிலையில் உத்தர பிரதேசத்தில் ஷியா மத்திய வக்ஃப் வாரியத் தலைவர் வசீம் ரூ.51,000 நிதியுதவி தருவதாக கூறியுள்ளார்.
உச்சநீதிமன்றத்தின் ராமர் கோவில் தொடர்பான தீர்ப்பானது சிறந்த தீர்ப்பு என ஷியா மத்திய வக்ஃப் வாரியத் தலைவர் வசீம் ரிஸ்வி கூறியுள்ளார். மேலும், அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக,சியா பிரிவின் தலைவர் அவரின் வசீம் ரிஸ்வி ஃபிலிம்ஸ் சார்பில் ரூ.51,000 ஆயிரம் நன்கொடையாக வழங்குவதாக அறிவித்துள்ளார் அதுமட்டுமில்லாமல் , இராமர் கோயில் கட்டுமான பணிகளின் ஷியா மத்திய வக்ஃப் வாரியம் உதவும் எனவும் தெரிவித்தார்.