இதுவரை 2300 முறை அத்துமீறிய பாகிஸ்தான் - ஒவ்வொரு முறையும் அடித்து ஓட விட்ட இந்திய இராணுவம் : வெளியான பரபரப்பு தகவல்!
இதுவரை 2300 முறை அத்துமீறிய பாகிஸ்தான் - ஒவ்வொரு முறையும் அடித்து ஓட விட்ட இந்திய இராணுவம் : வெளியான பரபரப்பு தகவல்!
By : Kathir Webdesk
காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு காஷ்மீரில் எல்லை கட்டுப்பாடு கோடு பகுதியில் பாகிஸ்தான் 950 முறை அத்துமீறி தாக்குதல் நடத்தி உள்ளது.
அதேபோல் சர்வதேச எல்லையில் 79 முறை தாக்குதல் நடத்தி உள்ளது. இந்த ஆண்டில் மட்டும் தற்போது வரை 2300 முறை பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி உள்ளது. சிகாஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு 50 சதவீதம் தாக்குதல் அதிகரித்து இருக்கிறது.
இதுவே கடந்த ஆண்டு 1629 முறை அத்துமீறி தாக்குதல் நடந்து இருந்தது. 2016 ஆம் ஆண்டு 228 தாக்குதலும், 2017 ஆம் ஆண்டு 860 தாக்குதலும் நடந்து உள்ளது. மேலும் பயங்கரவாதிகள் ஊடுருவலுக்கு பாகிஸ்தான் உதவுகிறது. 2018 ஆம் ஆண்டு 328 முறை பயங்கரவாதிகள் ஊடுருவலுக்கு முயன்றனர்.
இதற்கு அடுத்து கல்வீச்சு சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. கல்வீச்சு சம்பவங்களை தடுக்க பிரச்சினைகளை உண்டாக்குபவர்கள், தூண்டி விடுபவர்கள் உள்ளிட்டோரை கண்டறிந்து அவர்களை பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.