Kathir News
Begin typing your search above and press return to search.

3 முறை பா.ஜ.க எம்.எல்.ஏவாக இருந்தவரின் மனைவி, காய்கறி விற்கிறார்! உடன் பிறப்புகளுக்கு சமர்பணம்!

3 முறை பா.ஜ.க எம்.எல்.ஏவாக இருந்தவரின் மனைவி, காய்கறி விற்கிறார்! உடன் பிறப்புகளுக்கு சமர்பணம்!

3 முறை பா.ஜ.க எம்.எல்.ஏவாக இருந்தவரின் மனைவி, காய்கறி விற்கிறார்! உடன் பிறப்புகளுக்கு சமர்பணம்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  27 Nov 2019 10:52 AM GMT


ஜார்க்கண்ட் மாநிலம் பட்காகோன் சட்டமன்றத் தொகுதியில் 1995, 2000, 2004 ஆகிய மூன்று முறை எம்எல்ஏவாக இருந்தவர் லோக்நாத் மேக்டோ. 74 வயதான இவர், இந்த முறையும் இந்த தொகுதியில் பாஜக வேட்பாளராக களம் இறங்கி உள்ளார்.


லோக்நாத், 2005-ஆம் ஆண்டு சிறந்த எம்எல்ஏ கான, விருதையும் பெற்றுள்ளார். மிகவும் எளிமையான இவர், தனக்கு கிடைத்த எம்எல்ஏ சம்பளம் மற்றும் எம்எல்ஏ பென்சன் போன்றவற்றை ஏழைப் பெண்களின் திருமண செலவுக்காக பயன்படுத்தி வந்துள்ளார். பல்வேறு அரசு உதவிகளை தொகுதி மக்களுக்கு வாங்கி கொடுத்துள்ளார்.


3 முறை எம்எல்ஏவாக இருந்தும் லோக்நாத், தன் குடும்ப வறுமையை போகவில்லை. இவரது மனைவி மவுலினிதேவி. லோக்நாத் எம்எல்ஏவாக தேர்ந்தெடுப்பதற்கு முன்பு மவுலினிதேவி, காய்கறி விற்று பிழைப்பை நடத்தி வந்துள்ளார். அவர் எம்எல்ஏ ஆன பிறகும், இவர் காய்கறி வியாபாரம் செய்துதான் குடும்பத்தை நடத்தியுள்ளார். லோக்நாத் எம்எல்ஏ பதவியில் இல்லாத போதும் அவரது மனைவி காய்கறி வியாபாரம் செய்துதான் குடும்ப செலவை ஈடு செய்திருக்கிறார். அந்த காய்கறி வியாபாரம் இன்றும் தொடர்ந்து நடக்கிறது.



3 முறை பா.ஜ.க எம்.எல்.ஏவாக இருந்தவரின் மனைவி, காய்கறி விற்கிறார்! உடன் பிறப்புகளுக்கு சமர்பணம்!


இதுகுறித்து மாலினி தேவியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-


நான் நீண்ட காலமாக காய்கறி விற்று வருகிறேன். அவர் எம்எல்ஏவாக இருந்த போதும் நான் இந்த தொழிலை செய்தேன். இப்போதும் செய்கிறேன். எங்களுக்கு காய்கறி தோட்டம் உள்ளது. இதை நான் ஒரு இழிவான தொழிலாக ஒருபோதும் நினைத்ததில்லை. அதேபோல எனது கணவரின் வருமானத்தை எதிர்பார்த்து நான் காத்திருந்ததும் இல்லை. காய்கறி வியாபாரம் செய்வதன் மூலம் கிடைக்கும் பணத்தை கொண்டு நான் எனது குடும்பத்தை நடத்துகிறேன்.


இவ்வாறு மவுலினி தேவி கூறினார்.


பாஜக முன்னாள் எம்எல்ஏ லோகநாத் கூறும்போது, “எனது மனைவி காய்கறி வியாபாரம் செய்து குடும்பத்தை கவனித்துக் கொள்கிறார். நான் மக்களுக்காக சேவை செய்கிறேன்” என்றார் மகிழ்ச்சியாக.


சதாரணமாக காய்கறி வியாபாரம் செய்துவரும், மவுலினி தேவி, திடீரென இந்திய அளவில் செய்தியில் இடம்பித்து பலரது இதயத்திலும் இடம்பிடித்து உள்ளார்.


“என்னையா இந்தாளு லோக்நாத், விவரம் தெரியாத ஆளாக இருக்கிறான்” என்கின்றனர் நம்மூர் உடன்பிறப்புக்கள்.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News