Kathir News
Begin typing your search above and press return to search.

எம்.எஸ் டோனியின் கிரிக்கெட் வாழ்க்கையில் மறக்க முடியாத இரண்டு தருணம்!

எம்.எஸ் டோனியின் கிரிக்கெட் வாழ்க்கையில் மறக்க முடியாத இரண்டு தருணம்!

எம்.எஸ் டோனியின் கிரிக்கெட் வாழ்க்கையில் மறக்க முடியாத இரண்டு தருணம்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  29 Nov 2019 7:58 AM GMT


இந்தியா அணியின் மிகப்பெரிய சாதனைக கேப்டனாக திகழ்ந்தவர் எம்.எஸ் டோனி. அவர் இந்தியாவிற்காக மூன்று ஐ.சி.சி டிராபி, 2007-ல் டி20 உலகக்கோப்பை, 2011-ல் 50 ஓவர் உலகக்கோப்பை, 2013-ல் சாம்பியன்ஸ் டிராபி ஆகியவற்றை கைப்பற்றி கொடுத்தவர்.
அவருடைய கிரிக்கெட் வாழ்க்கையில் மிக முக்கியமான இரண்டு விஷயங்கள் என்னவென்று எம்.எஸ் டோனி தெரிவித்துள்ளார்.



எம்.எஸ் டோனியின் கிரிக்கெட் வாழ்க்கையில் மறக்க முடியாத இரண்டு தருணம்!


இதை குறித்து எம்.எஸ் டோனி கூறுகையில், 1-வது தருணம் தென்ஆப்பிரிக்காவில் 2007-ம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பையை வெற்றி பெற்று இந்தியாவிற்கு திரும்பியபோது, மும்பையில் உள்ள மரைன் டிரைவில் நாங்கள் திறந்த வெளி பேருந்தில் உலா வந்தோம். அப்போது அங்கு உள்ள மக்கள் பெரும் கரகோஷம் அளித்தனர். அவர்களின் முகத்தில் அப்படி ஒரு பெரும் சந்தோஷம். அப்போது அவர்களுக்கு பல வேலைகள் இருக்கும் மற்றும் விமானத்தை கூட விட்டு இருக்கலாம்.



எம்.எஸ் டோனியின் கிரிக்கெட் வாழ்க்கையில் மறக்க முடியாத இரண்டு தருணம்!


2-வது தருணம் 2011 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில், இந்தியா அணியின் வெற்றிக்கு 15-20 ரன்கள் தேவையாக இருந்தது, அப்போது அனைத்து மக்களும் வந்தே மாதரம் என்று கரகோஷம் அளித்தனர்.


இந்த இரண்டு நிகழ்வுகளும் மீண்டும் நிகழ்வது மிகவும் கடினமானது. இந்த இரண்டு சம்பவங்களும் என் வாழ்நாளில் மறக்கமுடியாது என்றார்.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News