Kathir News
Begin typing your search above and press return to search.

திருப்பதியில் தொடரும் கிறிஸ்தவ மதமாற்ற பிரச்சாரம்! கொதித்தெழுந்த இந்துக்கள்! பிரதமர் மோடிக்கு புகார்கள் குவிந்தன!

திருப்பதியில் தொடரும் கிறிஸ்தவ மதமாற்ற பிரச்சாரம்! கொதித்தெழுந்த இந்துக்கள்! பிரதமர் மோடிக்கு புகார்கள் குவிந்தன!

திருப்பதியில் தொடரும் கிறிஸ்தவ மதமாற்ற பிரச்சாரம்! கொதித்தெழுந்த இந்துக்கள்! பிரதமர் மோடிக்கு புகார்கள் குவிந்தன!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  2 Dec 2019 7:27 AM GMT


ஆந்திராவில் ராஜசேகர ரெட்டி முதல்வராக இருந்தபோது கிறிஸ்தவ மதமாற்றம் கட்டவிழ்த்துவிடப்பட்டது. பலவகையிலும் அரசே கிறிஸ்தவமதமாற்றத்தை ஊக்குவித்து வந்தது. இதற்கெல்லாம் ஒரே காரணம் முதல்வராக இருந்த ராஜசேகர ரெட்டி கிறிஸ்தவர் என்பதுதான்.


இப்போது அவரது மகன் ஜெகன்மோகன் ரெட்டி முதல்வராக உள்ளார். இவர் தந்தையைவிட பல மடங்கு கிறிஸ்தவ வெறி உடையவர். இவர் முதல்வர் ஆவதுவரை, கிறிஸ்தவ மதமாற்ற மிஷினரி கும்பல்கள் சற்று அடக்கி வாசித்த வந்தது. ஆனால், ஜெகன்மோகன் ரெட்டி முதல்வரானதும் மீண்டும் தங்களது வெறியாட்டத்தை அரங்கேற்றி வருகின்றன.


வீடு வீடாக சென்று கிறிஸ்தவ மத மாற்றம் செய்வது, மருத்துவமனைகளில் கிறிஸ்தவ மதமாற்றம் செய்வது, அரசு அலுவலகங்களில் புகுந்து அரசு ஊழியர்களைகிறிஸ்தவர்களாக மதம் மாற்றுவது, இப்படி மதமாற்ற வேலைகளில் கிறிஸ்தவ மிஷினரி கும்பல்கள் ஈடுபட்டு வருகின்றன.


இது ஒருபுறமிருக்க திருமலையையும், திருப்பதி ஏழுமலையான் பக்தர்களையும் முக்கிய இலக்காககொண்டு, கிறிஸ்தவ மிஷனரி கும்பல்கள் நீண்டகாலமாகவே செயல்பட்டு வருகின்றன. திருமலை, சபரிமலை போன்ற இந்துக்களின் புனித ஸ்தலங்களை ஒழித்துவிட்டால், அவர்களின் கிறிஸ்தவ மதமாற்ற வியாபாரம் சிறப்பாக நடைபெறும் என்பது அவர்களின் எதிர்பார்ப்பு.


ஆனால், ஏழுமலையானிடம் ஏற்கனவே தனது வேலையை காண்பித்த ராஜசேகர ரெட்டியின் முடிவு அனைவரும் அறிந்த ஒன்று. இதேபோல, சபரிமலையின் புனிதத்தை கெடுக்க நினைத்த பிணராயி விஜயனின் கம்யுனிஸ்ட் அரசுகடந்த பாராளுமன்ற தேர்தலில் என்ன ஆனது என்பதும் அனைவருக்கும் தெரிந்ததுதான்.



திருப்பதியில் தொடரும் கிறிஸ்தவ மதமாற்ற பிரச்சாரம்! கொதித்தெழுந்த இந்துக்கள்! பிரதமர் மோடிக்கு புகார்கள் குவிந்தன!


இருப்பினும் ஜெகன்மோகன் ரெட்டியை கிறிஸ்தவ மிஷனரி கும்பல்கள் தொடர்ந்து மூளைசலவை செய்து, தவறாக வழிநடத்தி வருகின்றன. அவரும் தனது இயேசு கிறிஸ்துவின் விஸ்வாசத்தைக் காட்ட தொடர்ந்து ஏழுமலையானிடதம் விளையாடி வருகிறார். இதனால், கிறிஸ்தவ மிஷினரி கும்பல்கள் பல்வேறு நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன.


கடந்த சில மாதங்களுக்கு முன்பு, திருப்பதியிலிருந்து திருமலைக்கு செல்லும் திருப்பதி தேவஸ்தான பேருந்து பயணச் சீட்டின் பின்புறம் கிறிஸ்தவ மதமாற்ற வாசகங்களை அச்சடித்து ஏழுமலையான் பக்தர்கள் கையில் திணித்தனர். இந்தப் பிரச்சினை பூதாகரமானவுடன் ஜெகன்மோகன் ரெட்டி அரசு, சுதாரித்துக்கொண்டு பின்வாங்கியது.


இப்போது மீண்டும் அது போன்ற கிறிஸ்தவ மதமாற்ற பிரச்சார வேலையில் திருப்பதி தேவஸ்தானத்தில் பணிபுரியும் கிறிஸ்தவர்கள் ஈடுபட்டுள்ளனர். திருப்பதி தேவஸ்தானத்தில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவரும் இந்துக்களாக இருக்க வேண்டும் என்பது விதிமுறை. ஆனால் பலர் இந்துப் பெயர்களில் கிறிஸ்தவர்களாக அங்கு வேலை பார்த்து வருகின்றனர். இது தேவஸ்தான உயர் அதிகாரிகளுக்கு தெரியும். ஆனால் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கிறிஸ்தவர் என்பதால் அவரின் விருப்பத்திற்கு இணங்க, திருப்பதி ஏழுமலையான் சன்னதியில் இருந்து கொண்டே இந்து மதத்திற்கு துரோகம் செய்து வருகின்றனர்.


இதன் உச்ச கட்டமாக திருப்பதி தேவஸ்தான அதிகாரப்பூர்வ இணையதளத்தில், "இயேசு உங்களிடம் அன்பு செலுத்துகிறார்", "இயேசு உங்களை வழி நடத்துகிறார்", "இயேசு உங்களுக்காகவே மன்றாடுகிறார்" என்ற கிறிஸ்தவ மத மாற்ற பிரச்சாரத்தை வெளிப்படையாக அரங்கேற்றி உள்ளனர்.


இதை பார்த்த இந்துக்கள் கொதித்து எழுந்தனர். அவர்கள் இதுவரை இல்லாத அளவு இந்த முறை தங்களது புகார்களை பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பி வருகின்றனர். அநத புகார்களில், 2 கோரிக்கைகளை முன்னிலைப்படுத்தி உள்ளனர் .திருப்பதி தேவஸ்தானத்தில் பணிபரியும் அனைத்து கிறிஸ்தவர்களையும் உடனடியாக பணியில் இருந்து நீக்க வேண்டும் என்பது முதல் கோரிக்கை. திருப்பதி தேவஸ்தானத்தை விட்டு அரசு உடனே வெளியேற வேண்டும், அது இந்துக்களால் நிர்வகிக்கப் படவேண்டும். என்பது இரண்டாவது கோரிக்கை.


இதுதொடர்பான புகார் மனுக்களை பிரதமருக்கு இந்துக்கள் அனுப்பி வருகின்றனர். இந்து அமைப்புகளும் களத்தில் இறங்கி முழுமூச்சாக இதில் ஈடுபட்டு உள்ளனர்.


பிரதமர் நரேந்திர மோடிக்கு புகார் அனுப்ப வலியுறுத்தி சமூக வலைத்தளங்களில் பிரச்சாரத்திலும் ஈடுபட்டு உள்ளனர். எனவே இந்த முறை ஜெகன்மோகன் ரெட்டி எளிதாக தப்பிப்பது இயலாது என்கின்றனர் இந்து மத பெரியவர்கள்.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News