நாடாளுமன்ற, சட்டமன்ற எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கான தொகுதி ஒதுக்கீடு மேலும் 10 ஆண்டுகள் நீட்டிப்பு - மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
நாடாளுமன்ற, சட்டமன்ற எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கான தொகுதி ஒதுக்கீடு மேலும் 10 ஆண்டுகள் நீட்டிப்பு - மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
By : Kathir Webdesk
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த நவம்பர் 15 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 13ஆம் தேதி வரை நடைபெறுகிறது இந்த கூட்டத் தொடரில் பல முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட மத்திய அரசு முடிவு செய்து உள்ளது இது தொடர்பாக ஆலோசிக்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று டெல்லி நாடாளுமன்ற கட்டிடத்தில் தொடங்கியுள்ள இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநில சட்டசபை தொகுதிகளில் தாழ்த்தப்பட்டோர்(எஸ்.சி) மற்றும் பழங்குடியினருக்கென (எஸ்.டி) தனி தொகுதிகள் ஒதுக்கப்படுகின்றன. இந்த தொகுதிகளில் அந்த பிரிவினர் மட்டுமே போட்டியிட முடியும்.
தற்போது இந்த ஒதுக்கீடு அடுத்த மாதம்(ஜனவரி) 25ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில், இந்த ஒதுக்கீட்டை மேலும் 10 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு செய்வதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது இதேபோல் பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் வங்கதேசம் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியாவில் குடியேறிய சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்க வழிவகை செய்யும் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.