Kathir News
Begin typing your search above and press return to search.

டெல்லி தீ விபத்து,43 உயிரிழப்புகளுக்கு காரணமான கட்டிட உரிமையாளர் ரேஹான் கைது.!

டெல்லி தீ விபத்து,43 உயிரிழப்புகளுக்கு காரணமான கட்டிட உரிமையாளர் ரேஹான் கைது.!

டெல்லி தீ விபத்து,43 உயிரிழப்புகளுக்கு காரணமான கட்டிட உரிமையாளர் ரேஹான்  கைது.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  8 Dec 2019 4:10 PM GMT


டெல்லியில் ராணி ஜான்சி சாலையில் உள்ள பை தயாரிக்கும் தொழிற்சாலையில் இன்று அதிகாலை பயங்கரமான தீ விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து அருகே இருந்த கட்டடங்களிலும் தீ மளமளவென பரவியது.


இதுகுறித்து தகவலறிந்து 35வாகனங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படை வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வர போராடி வருகின்றனர் இந்த நிலையில் இந்த தீவிபத்தில் தொழிற்சாலையில் தூங்கிக்கொண்டிருந்தார் 43 தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழந்தனர் தொழிற்சாலையில் இருந்த 50 க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


இந்நிலையில், அனுமதியின்றி வீட்டில் தொழிற்சாலை நடத்தி 43 உயிரிழப்புகளுக்கு காரணமான கட்டிட உரிமையாளர் ரேஹான் என்பவரை போலீசார் கைது செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்,அவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) பிரிவு 304 ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News