இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை-அமித் ஷாவின் அதிரடி!
இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை-அமித் ஷாவின் அதிரடி!
By : Kathir Webdesk
தேசிய குடியுரிமை சட்டம் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு சட்டம் அமலாக்கப்பட்டது. இதறகு ஆதரவும் எதிர்ப்பும் இருந்து வருகிறது. இந்த நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் டெல்லி சென்றிருந்தார். அங்கு நடைபெற்ற மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கான தேசிய ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டார்.
அதன்பின் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு தமிழக அரசியலில் பரப்பரப்பை ஏற்படுத்தியது. குடியுரிமை சட்டம் ஆதரவாக அ.தி.மு.கவும் வாக்களித்தது குறிப்பிடத்தக்கது .
சந்திப்பின் போது இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்குவது பற்றி கோரிக்கை வைத்துள்ளார் முதல்வர். உங்களின் கோரிக்கை பரிசீலிக்கப்படும் அதற்கான நடவடிக்கை குறித்து ஆராயப்படும் என மத்திய அமைச்சர் அமித் ஷா உறுதி அளித்திருக்கிறார் என என அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ செய்தி தாளில் செய்தி வெளியாகி உள்ளது
நாளை நடைபெறும் எதிர்க்கட்சிகளின் முக்கிய கோரிக்கையே ஈழத்தமிழர் பிரச்சனை தான் இந்நிலையில் அமித் ஷா இதை பற்றி பரிசீலிக்கப்படும் என செய்தி வெளியாகியிருப்பது எதிர்கட்சியினரை குழப்பம் அடைய செய்துள்ளது . பொய் பிரச்சாரம் செய்து தமிழக மக்களிடம் கலவரத்தை தூண்ட காத்திருக்கும் எதிர்க்கட்சிகளுக்கு இது பேரிடியாக உள்ளது.