Kathir News
Begin typing your search above and press return to search.

மோடி என்கிற வீரனின் கையில் இருப்பதால்தான் இந்தியா இந்தியாவாக உள்ளது - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி !

மோடி என்கிற வீரனின் கையில் இருப்பதால்தான் இந்தியா இந்தியாவாக உள்ளது - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி !

மோடி என்கிற வீரனின் கையில் இருப்பதால்தான் இந்தியா இந்தியாவாக உள்ளது - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி !

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  23 Dec 2019 11:29 AM GMT


தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சிவகாசி ஊராட்சி ஒன்றியத்தில் போட்டியிடும் அதிமுக கவுன்சிலர் வேட்பாளர்களுக்காக பிரசாரம் செய்து வருகிறார். அப்போது அவர் தமிழக அரசியல் நிலைமை பற்றியும் தேசிய தலைவர்கள் கருத்துரைத்தார்.


அதிமுகவை வெல்வதற்கு இனி ஒரு கட்சி பிறந்துதான் வரவேண்டும் என்று கூறிய அவர், ஸ்டாலின் எரிகிற வீட்டில் கிடைத்த வரை பிடுங்கிக்கொள்ளும் சிந்தனை உள்ள ஓர் அரசியல்வாதியாக உள்ளார் என்றார்.


“மேற்கு வங்காள முதல்வர் மம்தா, அந்த மாநிலத்தில் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கிறார். அவர் கையில் அதிகாரங்கள் குவிந்தால் மேற்கு வங்காளம் சுடுகாடாகிவிடும் என்ற அமைச்சர் ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் சோனியா உள்ளிட்ட தலைவர்கள் மக்களிடம் பீதியைக் கிளப்பி வருவதாகவும் கூறினார்.


இந்தியாவுக்கு எதிராக குரல் கொடுப்பவர்களைத் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று கூறிய அவர், மோடி என்ற வீரன் கையில் உள்ளதால்தான் இந்தியா இந்தியாவாக உள்ளது என்றும் கூறினார்.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News