அதிகாரிகள் கையை உடைப்போம் தி.மு.க மாவட்ட செயலாளர் மிரட்டல்! ரவுடிகளின் கூடாரமா தி.மு.க!
அதிகாரிகள் கையை உடைப்போம் தி.மு.க மாவட்ட செயலாளர் மிரட்டல்! ரவுடிகளின் கூடாரமா தி.மு.க!
By : Kathir Webdesk
திருவண்ணாமலை தி.மு.க மாவட்ட செயலாளர் வேலு ஒரு கூட்டத்தில் பேசுகையில் அவர் உள்ளாட்சி தேர்தல் குறித்து பேசினார். அப்போது அவர் தேர்தலில் ஈடுபடும் அதிகாரிகள் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டால் அவர்களின் கையை உடைப்போம் அது ஒன்றும் பெரிதல்ல வழக்குகளை நாங்கள் சந்தித்து கொள்வோம் அது எப்படி என்றும் தெரியும் என ரவுடி தொனியில் பேசினார்.
அவர் பேசியது ஆளுங்கட்சி என சொல்லி மறைமுகமாக அரசு அதிகாரிகளை மிரட்டுகிறார். அதுவும் இந்த தேர்தலில் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல் பட்டால் அவர்களின் பட்டியலை எடுத்து வைத்து கொண்டு திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பேசினார். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அரசு இயந்திரம் எங்கள் கையில் அதனால் ஒழுங்காக திமுகவிற்கு ஆதரவாக செயல்படுங்கள் என சொன்னது போல் அவரின் பேச்சு இருந்தது.
திமுகவின் தோல்வி பயம் இதிலிருந்து தெரிய ஆரம்பித்துள்ளது.