Kathir News
Begin typing your search above and press return to search.

"அமித்ஷாவை ஏன் இன்னும் கொலை செய்யவில்லை?" - முஸ்லிம்களிடம் கேட்டவர் நெல்லை கண்ணன்! கொந்தளித்தது தமிழகம்!

"அமித்ஷாவை ஏன் இன்னும் கொலை செய்யவில்லை?" - முஸ்லிம்களிடம் கேட்டவர் நெல்லை கண்ணன்! கொந்தளித்தது தமிழகம்!

அமித்ஷாவை ஏன் இன்னும் கொலை செய்யவில்லை? - முஸ்லிம்களிடம் கேட்டவர் நெல்லை கண்ணன்! கொந்தளித்தது தமிழகம்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  30 Dec 2019 11:18 AM GMT



தேசிய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகளும், சில முஸ்லிம் பயங்கரவாத அமைப்புகளும் கலவரத்தை தூண்டி வருகின்றன. இதற்கு உறுதுணையாக தடைசெய்யப்பட்ட முஸ்லிம் பயங்கரவாத அமைப்பான சிமி போன்றவற்றில் தீவிரமாக செயல்பட்ட முஸ்லிம் பயங்கரவாதிகள் இப்போது களமிறங்கியுள்ளனர்.


திமுக, திக, கம்யூனிஸ்டுகள், திருமாவளவன் உள்பட தமிழகத்திலுள்ள தேச விரோத கும்பல்கள் அனைத்தும் ஒன்றிணைந்து கலவரத்தை தூண்டி வருகின்றன.


நெல்லை மேலப்பாளையத்தில் இந்த கும்பல்கள; இணைந்து தேச விரோத கருத்துக்களை பரப்பியது. இவர்களுடன் பிரபல பட்டிமன்றப் பேச்சாளரும், இந்து விரோதியுமான நெல்லை கண்ணனும் இணைந்து தேச விரோத விஷத்தை கக்கினார். இந்த நிகழ்ச்சிக்கு முஸ்லிம் பயங்கரவாத அமைப்பான எஸ்.டி.பி.ஐ ஏற்பாடு செய்துள்ளது.


இதில் பேசிய நெல்லை கண்ணன், பிரதமர் நரேந்திர மோடியை மிகக் கேவலமாக விமர்சித்து உள்ளார். இவர் தன்னை ஒரு முஸ்லிம்களின் உறவினராக காட்டிக்கொண்டுள்ளார்.
நெல்லை கண்ணன், இந்துக்களின் கோயில் நிகழ்ச்சிகளில் பட்டிமன்றம் நடத்தியே வயிறு வளர்த்தவர். இப்போது பயங்கரவாத முஸ்லிம் கும்பல்களுடனும், பிரிவினைவாத கும்பல்களுடனும் கைகோர்த்து உள்ளார்.


இவர், அந்த மேடையில் இருந்த முஸ்லிம்களைப் பார்த்து, “உள்துறை அமைச்சர் அமித்ஷாவை ஏன் இன்னும் கொலை செய்யவில்லை” என்று கேட்ட வீடியோ இப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. “நீங்கள், அமித்ஷாவை கொலை செய்வீர்கள் என்று நான் எதிர்பார்க்கிறேன். ஆனால் நீங்கள் இன்னும் செய்யவில்லை” என்று முஸ்லிம்களை தூண்டிவிட்டு பேசியுள்ளார்.


இவர் தன்னை காமராஜரின் திருத்தொண்டர் என்று மேடைதோறும் பித்தலாட்டமாக பேசி வருவது வாடிக்கை. இன்னொருபுறம் காந்தியின் பாதையில் வந்தவன் என்பதையும் பறைசாற்றி வருபவர். அப்படிப்பட்ட நெல்லை கண்ணன், இப்போது முஸ்லிம்களிடம், “அமித்ஷாவை கொலை செய்யுங்கள்” என்று தூண்டி விடுகிறார். “இன்னும் ஏன் அமித்ஷாவை கொலை செய்யவில்லை?” என்று வருத்தமுடன் கேட்கிறார்.
நெல்லை கண்ணன் இப்படி பேசியபோது அதை மேடையில் இருந்த எந்த ஒரு முஸ்லிமும் கண்டிக்கவில்லை. மாறாக அனைவரும் அதை வரவேற்று சிரிக்கின்றனர். இதில் பெண்களும் அடக்கம்.


சமூக வலைத்தளங்களின் மூலம் இவரது பேச்சு அனைத்து தரப்பு மக்களிடமும் வேகமாக பரவி வருகின்றது. இதுதொடர்பாக போலீஸ் கமிஷனரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தமிழக பாஜக பொதுச் செயலாளர் வானதி சீனிவாசனும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். நெல்லை கண்ணன் மீது தமிழக போலீசார் உடனடியாக நடிவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார் .




https://twitter.com/VanathiBJP/status/1211554488831492096



இருப்பினும் நெல்லை கண்ணன் இன்னமும் கைது செய்யப்படவில்லை. எதற்காக அவரை இன்னமும் கைது செய்யவில்லை என்பதுதான் ஒட்டுமொத்த தமிழர்களின் கேள்வியாக உள்ளது.


நெல்லை கண்ணனின் இந்த கொலை வெறி பேச்சு, தேச பக்தர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.



Next Story
கதிர் தொகுப்பு
Trending News