Kathir News
Begin typing your search above and press return to search.

அடையாள அட்டை இல்லன்னா பரவாயில்லை..செல்போன் மட்டும் இருந்தா ஓட்டு போடலாம்! ஆணையம் புதிய அறிவிப்பு!

அடையாள அட்டை இல்லன்னா பரவாயில்லை..செல்போன் மட்டும் இருந்தா ஓட்டு போடலாம்! ஆணையம் புதிய அறிவிப்பு!

அடையாள அட்டை இல்லன்னா பரவாயில்லை..செல்போன் மட்டும் இருந்தா ஓட்டு போடலாம்! ஆணையம் புதிய அறிவிப்பு!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  9 Jan 2020 9:12 AM GMT



நடைபெறவுள்ள டெல்லி சட்டசபை தேர்தலில், வாக்காளர் சீட்டை கொண்டு வராதவர்கள் ஸ்மார்ட்போனை பயன்படுத்தி ஓட்டு போடலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.


டெல்லி சட்டசபை தேர்தல், பிப்ரவரி 8-ந் தேதி நடக்கிறது. மொத்த தொகுதிகள் 70 ஆகும். வாக்குச்சாவடிக்கு வாக்காளர் சீட்டை (பூத் ஸ்லிப்) எடுத்துச் செல்ல மறந்து விட்டவர்களுக்கு ஸ்மார்ட்போன் இருந்தால் போதும். அவர்களுக்காக ‘க்யூஆர்’ கோட் வசதியை பயன்படுத்தி வாக்களிக்கும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்படுகிறது. மொத்தம் உள்ள 11 மாவட்டங்களில் தலா ஒரு சட்டசபை தொகுதி வீதம் 11 தொகுதிகளில் இந்த வசதி அறிமுகம் ஆகிறது.


இதன்படி, அத்தகைய வாக்காளர்கள் ஸ்மார்ட்போன் வைத்திருந்தால், வாக்காளர் உதவி மைய செயலியில் (ஆப்) இருந்து ‘க்யூஆர்’ கோட்-ஐ பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். பிறகு அதை ‘ஸ்கேன்’ செய்துவிட்டு, ஓட்டு போட அனுமதி வழங்கப்படும். ஓட்டுப்பதிவு எந்திரம் உள்ள பகுதிக்கு சற்று தள்ளி ஸ்மார்ட்போனை வைத்து விட்டு ஓட்டு போட வேண்டும்.


இந்த தகவல்களை டெல்லி தலைமை தேர்தல் அதிகாரி ரன்பீர் சிங் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறினார். மேலும் 80 வயதை தாண்டிய மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கு அவர்களது வீட்டிலேயே தபால் ஓட்டு வசதி அளிக்கப்பட உள்ளது. இந்த தகவல்களையும் டெல்லி தலைமை தேர்தல் அதிகாரி ரன்பீர் சிங் தெரிவித்தார்.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News