"புதுவையில் நாராயணசாமிக்கு ஆட்சி நடத்த தகுதி இல்லை" – சொன்னவர் கிரண்பேடி அல்ல; காங்கிரஸ் எம்.எல்.ஏ தனவேலு!
"புதுவையில் நாராயணசாமிக்கு ஆட்சி நடத்த தகுதி இல்லை" – சொன்னவர் கிரண்பேடி அல்ல; காங்கிரஸ் எம்.எல்.ஏ தனவேலு!
By : Kathir Webdesk
“புதுவை முதல்வர் நாராயணசாமிக்கு ஆட்சி நடத்த தகுதி இல்லை. தகுதி இல்லாத முதல்வர் நாராயணசாமி உடனே பதவி விலக வேண்டும்” என்று கவர்னர் கிரண்பேடி கூறவில்லை. நாராயணசாமியின் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்எல்ஏவான தனவேல்தான் இப்படி அதிரடியாக கூறியுள்ளார்.
தனவேலு புதுவை பாகூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் உயிர் காக்கும் மருந்துகள் இல்லை என்று கூறி புதுவை முதல்வர் நாராயணசாமிக்கு எதிராக பேரணி நடத்தினர். அதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். அப்போது நாராயணசாமிக்கு எதிராக அவர்கள் கோஷம் எழுப்பினர். பின்னர் எம்எல்ஏ தனவேலு கூறியதாவது:-
புதுவையில் ஆட்சி நடத்த தகுதியில்லாத நாராயணசாமி முதல்வராக அமர்ந்து உள்ளார். அவர் பொது மக்களின் உயிருடன் விளையாடி வருகிறார். தனது மோசமான ஆட்சியை திசைதிருப்பவே, கவர்னர் கிரண்பேடி மீது குற்றம் சுமத்தி வருகிறார். இதன் மூலம் அவர் தப்பிக்கலாம் என்று நினைக்கிறார். ஆனால் தப்பிக்க முடியாது. நாராயணசாமிக்கு ஆளும் தகுதியே இல்லை.
இவ்வாறு தனவேல் எம்எல்ஏ அதிரடியாக பேசி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.