Kathir News
Begin typing your search above and press return to search.

கொலையாளிகளிடம் காசு வாங்கிக் கொண்டு பேசுவதா?? குற்றவாளிகளை மன்னிக்கக் கோரிய பிரபல பெண் வக்கீலுக்கு நிர்பயா பெற்றோர் சரமாரி கண்டனம்!

கொலையாளிகளிடம் காசு வாங்கிக் கொண்டு பேசுவதா?? குற்றவாளிகளை மன்னிக்கக் கோரிய பிரபல பெண் வக்கீலுக்கு நிர்பயா பெற்றோர் சரமாரி கண்டனம்!

கொலையாளிகளிடம் காசு வாங்கிக் கொண்டு பேசுவதா?? குற்றவாளிகளை மன்னிக்கக் கோரிய பிரபல பெண் வக்கீலுக்கு நிர்பயா பெற்றோர் சரமாரி கண்டனம்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  18 Jan 2020 12:29 PM GMT


நாட்டையே உலுக்கி எடுத்த நிர்பயா பாலியல் கொலையில் தொடர்புடைய நான்கு குற்றவாளிகளுக்கும் வரும் பிப்ரவரி மாதம் 2 ந்தேதி தூக்குதண்டனையை நிறைவேற்ற கோர்ட் உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே தேதிகள் குறிப்பிட்டும் இன்னும் இவர்களது தண்டனை நிறைவேற்றப்படாததால் நிர்பயாவின் பெற்றோர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.


இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் கொலையாளிகளை மன்னிக்கும்படியும், அவர்களை தூக்கு தண்டனையிலிருந்து காப்பாற்ற உதவும்படியும் நிர்பயா தாயாருக்கு வேண்டுகோள் விடுத்தார். மேலும் சோனியா காந்தி தனது கணவர் ராஜீவ் படுகொலையில் தொடர்புடைய நளினியை தூக்கு தண்டனையில் இருந்து காப்பாற்றியதைப் போல நீங்கள் உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.


இதனால் கோபம் அடைந்த நிர்பயாவின் தாயார் ஆஷா தேவி மற்றும் தந்தையார் பத்ரிநாத் சிங் “இந்திரா ஜெய்சிங் எங்களுக்கு ஒன்றும் அறிவுரை கூற தேவை இல்லை, இது போன்ற வக்கீல்களால்தான் தினமும் நாட்டில் பாலியல் வன்முறைகள் அதிகரிக்கின்றன. மேலும் இந்திரா ஜெய்சிங் குற்றவாளிகளிடம் பணம் பெற்றுக் கொண்டு அதன் மூலம் வாழ்ந்து வருகிறார். அதனால்தான் கொடுமையான குற்றவாளிகளைக் கூட மன்னிக்கக் கூறுகிறார்என்று ஆவேசமாகக் கூறினர்.


SOURCE:- INDIA TODAY


Next Story
கதிர் தொகுப்பு
Trending News