இந்தியாவின் பொருளாதார மந்த நிலை தற்காலிகமானது - வீண் விமர்சனங்களுக்கு ஐ.எம்.எப் தலைவர் வைத்த முற்றுப்புள்ளி!
இந்தியாவின் பொருளாதார மந்த நிலை தற்காலிகமானது - வீண் விமர்சனங்களுக்கு ஐ.எம்.எப் தலைவர் வைத்த முற்றுப்புள்ளி!
By : Kathir Webdesk
இந்தியாவில் நிலவும் பொருளாதார மந்தநிலை தற்காலிகமானதுதான் என கூறிய சர்வதேச நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா, இந்த நிலையை மேம்படுத்தி வளர்ச்சிப்பாதையில் நடைபோடுவதற்கான நடவடிக்கைகளை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.
சர்வதேச நிதியம் எதிர்பார்த்த அளவை விட 2020 ஆம் ஆண்டு ஜனவரியில் உலக நாடுகள் சிறப்பாக செயல்பட்டு வருவதாக கூறிய அவர், இந்தியாவின் பொருளாதார மந்த நிலை தற்காலிகமானது தான் என்று கூறியிருக்கிறார்.
உலகின் மிகப்பெரிய சந்தையான இந்தியா, விரைவில் தனது நிலையை மேம்படுத்தி வளர்ச்சி பாதைக்கு வரும் என்று கூறியுள்ளார். இதற்கு முன்னதாக ஆனந்த் மகேந்திராவும் இது போல கருத்து தெரிவித்திருந்தார்.
அரசு பொருளாதார முன்னேற்றத்திற்கான சிறந்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. உலக அளவிலான பொருளாதார மந்த நிலையின் தாக்கமே, இங்கு எதிரொலிப்பதாக கூறியிருந்தார்.