Kathir News
Begin typing your search above and press return to search.

தஞ்சை பெரிய கோவிலில் யாகசாலையில் தொடங்கி கோபுரக் கலசம் வரை 5 நிலைகளில் தமிழ் ஒலிக்கும்!

தஞ்சை பெரிய கோவிலில் யாகசாலையில் தொடங்கி கோபுரக் கலசம் வரை 5 நிலைகளில் தமிழ் ஒலிக்கும்!

தஞ்சை பெரிய கோவிலில் யாகசாலையில் தொடங்கி கோபுரக் கலசம் வரை 5 நிலைகளில் தமிழ் ஒலிக்கும்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  30 Jan 2020 2:57 AM GMT


தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கில் யாகசாலையில் தொடங்கி கோபுரக் கலசம் வரை 5 நிலைகளில் தமிழுக்கும், சம்ஸ்கிருதத்துக்கும் சம முக்கியத்துவம் வழங்கப்படும் என அறநிலையத் துறை மற்றும் தஞ்சை அரண்மனை தேவஸ்தானம் சார்பில் உறுதி அளிக்கப்பட்டது.


இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தபோது குடமுழுக்கு ஆகம விதிப்படி தமிழ் மற்றும் சம்ஸ்கிருதத்தில் நடத்தப்படும் என அறநிலையத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.


இதன்படி, யாகசாலை, நந்தி மண்டபம், நடராஜர் அலங்கார மண்டபம், கருவறை மற்றும கோபுரக் கலசங்கள் ஆகிய 5 நிலைகளில் தமிழ் மற்றும் சம்ஸ்கிருதத்துக்கு முக்கியத்துவம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News