Kathir News
Begin typing your search above and press return to search.

#KathirExclusive | அனைத்திலும் ஆகச்சிறந்த பல்டி - முரசொலி விவகாரத்தில் ஸ்டாலின் ஜெயிலுக்கு போவார்: ஆதாரத்தை அடுக்கும் தடா பெரியசாமி!

#KathirExclusive | அனைத்திலும் ஆகச்சிறந்த பல்டி - முரசொலி விவகாரத்தில் ஸ்டாலின் ஜெயிலுக்கு போவார்: ஆதாரத்தை அடுக்கும் தடா பெரியசாமி!

#KathirExclusive | அனைத்திலும் ஆகச்சிறந்த பல்டி - முரசொலி விவகாரத்தில் ஸ்டாலின் ஜெயிலுக்கு போவார்: ஆதாரத்தை அடுக்கும் தடா பெரியசாமி!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  31 Jan 2020 1:54 PM GMT


முரசொலி அலுவலகம் அமைந்துள்ள இடம் பஞ்சமி நிலம் அல்ல என்பதை நிரூபிக்கப் போவதாக சவால் விடுத்திருந்த தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினும், முரசொலி அறக்கட்டளையும் இப்போது அந்த நிலமே தங்களுடையது அல்ல; அந்த நிலத்தில் முரசொலி அலுவலகம் வாடகைக்கு தான் இயங்குகிறது என்று கூறி வரும் நிலையில் தமிழக பா.ஜ.க செயற்குழு உறுப்பினர் தடா பெரியசாமி சில கேள்விகளை முன்வைத்துள்ளார்.




https://www.youtube.com/watch?v=QW270NgknWg&feature=youtu.be


"அப்படி தி.மு.க வாடகை இடத்தில் இயங்கினால் வாடகை ஒப்பந்தம் ஒன்று இருக்க வேண்டும். வாடகை இடத்தில் இயங்க அறக்கட்டளை உறுப்பினர்கள் சேர்ந்து எடுத்த தீர்மான நகல் வேண்டும். வாடகை இடத்தில் இயங்க கணக்கு காண்பித்திருக்கும் ரசீது இருக்க வேண்டும். இதெல்லாம் தி.மு.க-வால் சமர்பிக்க முடியுமா?" என்று கேள்வியெழுப்பியுள்ளார்.


பஞ்சமி நிலம் தாழ்த்தப்பட்ட மக்களிடம் தான் இருக்க வேண்டும். இந்த விவகாரத்தில் தி.மு.க ஒரு பொய்யை மறைக்க, பொய்களுக்கு மேல் பொய்களை அடுக்கி வருகிறது. முரசொலி அலுவலகம் அமைந்துள்ள இடம் பஞ்சமி நிலம் தான் என்று நிரூபிக்கப்பட்டால், மு.க.ஸ்டாலின் கைது செய்யப்படும் நிலை கூட வரலாம் என்று கூறியுள்ளார் தடா பெரியசாமி.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News