மு.க.ஸ்டாலின் முகத்தில் கரியைப் பூசிய இளைஞன்! வைரல் ஆனது வீடியோ!
மு.க.ஸ்டாலின் முகத்தில் கரியைப் பூசிய இளைஞன்! வைரல் ஆனது வீடியோ!
By : Kathir Webdesk
நரேந்திர மோடி அரசு, தேசிய குடியுரிமை திருத்த சட்டத்தை கொண்டு வந்துள்ளது. இந்த சட்டத்தின் மூலம் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய இந்தியாவை ஒட்டியுள்ள முஸ்லிம் நாடுகளில் அங்குள்ள பெரும்பான்மை முஸ்லிம்களால் கொடுமைப்படுத்தப்பட்டு, துரத்தி அடிக்கப்பட்டு, இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள இந்துக்கள், கிறிஸ்தவர்கள், பார்சிகள், சீக்கியர்கள், ஜைனர்கள், புத்த மதத்தினர் ஆகியோருக்கு குடியுரிமை வழங்கப்படுகிறது.
இதன் மூலம் பல ஆண்டுகளாக இந்தியாவில் அகதிகள் முகாம்களில் அவதிப்பட்டு வரும் 33 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் பயன் பெறுகிறார்கள்.
ஆனால் அந்த சட்டத்தின்மூலம் பாகிஸ்தானில் உள்ள முஸ்லிம்களுக்கும் இந்தியாவில் குடியுரிமை வழங்க வேண்டும், அதாவது 1947-இல் மதத்தின் அடிப்படையில் இந்தியாவை வெட்டி பிளந்த பாகிஸ்தான் முஸ்லிம்களுக்கு இந்தியாவில் குடியுரிமை வழங்க வேண்டும் என்று திமுக போராடி வருகிறது. இதற்காக இங்கு உள்ள அப்பாவி முஸ்லிம்களை தூண்டி போராட்டம் என்ற பெயரில் கலவரங்களை ஏற்படுத்தி வருகிறது.
இதன் அடுத்த கட்டமாக ஒரு கோடி கையெழுத்து இயக்கத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்கி உள்ளார். சில திமுகவினரின் வீடுகள், கடைகளில் கையெழுத்து வாங்கி நாடகத்தை அரங்கேற்றினார் மு.க.ஸ்டாலின்.
இதைப் போல சாலையில் வாகனங்களில் செல்பவர்களிடமும் கையெழுத்து வாங்குவதற்காக மு.க.ஸ்டாலின் முயற்சி செய்தார். அப்படி ஒரு வாகனத்தில் அமர்ந்திருந்த ஒரு இளைஞரிடம் கையெழுத்து வாங்குவதற்காக அட்டையை மு.க.ஸ்டாலின் நீட்டினார்.
ஆனால் விபரம் தெரிந்த அந்த இளைஞர் ஸ்டாலின் முகத்தில் கரியை பூசுகின்ற வகையில், அவரின் முகத்தில் அறைந்தார்போல் கையெழுத்து போட மறுத்துவிட்டார்.
இதனால் அவமானபட்ட மு.க.ஸ்டாலின், அங்கிருந்து வேகமாக நடையைக் கட்டினார்.
இதனை படம் பிடித்த மு.க.ஸ்டாலின் குடும்ப தொலைக்காட்சி நிறுவனமான கலைஞர் தொலைக்காட்சி, இதை அப்படியே ஒளிபரப்பி விட்டது.
அவ்வளவுதான், அந்த குறிப்பிட்ட வீடியோவை நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் வைரலாக்கி, முக.ஸ்டாலின் முகத்திரையை கிழித்து வருகின்றனர்.