Kathir News
Begin typing your search above and press return to search.

ஸ்க்ரூ ட்ரைவரால் மூளையை பிதுக்கி எடுத்து கொல்லப்பட்ட கர்ப்பிணி ஆப்கன் பெண் போலீஸ் அதிகாரி - தாலிபான்கள் அட்டூழியம்!

ஸ்க்ரூ ட்ரைவரால் மூளையை பிதுக்கி எடுத்து கொல்லப்பட்ட கர்ப்பிணி ஆப்கன் பெண் போலீஸ் அதிகாரி - தாலிபான்கள் அட்டூழியம்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  6 Sep 2021 2:08 AM GMT

ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் முழுமையாக கைபற்றிய நாள் முதல் கொலைகள் சர்வசாதரணமாக நடந்து வருகின்றன. இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் கெளர் மாகாணத்தில் உள்ள பிரூச்கோவ் எனும் ஊரில் தாலிபான்கள் நடத்திய கொலைவெறி சம்பவம் உலகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

ஆப்கன் போலீஸ் படையில் இருந்த பெண்களை தேடித்தேடி கொன்று வருகின்றனர் தாலிபான் தீவிரவாதிகள். இதன் ஒரு பகுதியாக பிரூச்கோவில் வசித்து வந்த நெகர் எனும் போலீஸ் அதிகாரியை கொலை செய்ய அவர் வீட்டிற்குள் புகுந்த தாலிபான்கள் அவரது குடும்பத்தினருக்கு முன்பே அவரை கொடூரமாக கொன்று தீர்த்தனர்.

ஸ்க்ரூ ட்ரைவர் மூலம் நெகரின் மண்டை பிளக்கப்பட்டு மூளை வெளியில் எடுக்கப்பட, கொடூரமாக உயிரிழந்தார் நெகர். இவை அனைத்தும் அவர் குடும்பத்தினரின் கண் முன்னே நடந்துள்ளது.


நெகர் கர்ப்பிணியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் கர்ப்பிணி என குடும்பத்தினர் கெஞ்சியும், கதறியும் தாலிபான் தீவிரவாதிகள் சிறிதும் இரக்கம் காட்டவில்லையாம். நெகர் மட்டும் அல்ல, நேற்று மட்டும் 5 பெண் போலீஸ் அதிகாரிகள் கொடூரமான முறையில் தாலிபான்களால் கொல்லப்பட்டுள்ளனர். இந்த ஐவரும் அவரவர் குடும்பத்தினர் முன்பே கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இஸ்லாமிய புனித நூலான குரானின் படி, பெண்கள் போலீஸ் அதிகாரிகளாக பணியாற்றக்கூடாது என்பது தாலிபான்களின் வாதம். கடந்த 20 ஆண்டுகளாக ஜனநாயக நாடாக இருந்த ஆப்கானிஸ்தானில் பெண்கள் போலீஸ் படையில் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். தாலிபான்கள் இருபது வருடம் கழித்து ஆட்சியை பிடித்துள்ளதால், இஸ்லாமிய பழமைவாத பழக்கங்களை நிறுவுவதில் அதீத முக்கியத்துவம் காட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News