Kathir News
Begin typing your search above and press return to search.

இதை செய்தால் கொரோனா 3வது அலை வருவதற்கான வாய்ப்புகள் குறையும்: முதன்மை ஆலோசகர் கருத்து!

இதை செய்தால் கொரோனா 3வது அலை வருவதற்கான வாய்ப்புகள் குறையும்: முதன்மை ஆலோசகர் கருத்து!

Bharathi LathaBy : Bharathi Latha

  |  8 May 2021 11:56 AM GMT

இந்தியாவில் கடந்த மாதங்களாகவே கொரோனா வைரஸ் இன் பாதிப்பு உச்சத்தை அடைந்துள்ளது. இந்த இரண்டாவது அலை காரணமாக பல பெரிய பாதிப்புகள் இந்தியாவில் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக, மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு அவர்களுக்கு தேவையான ஆக்சிஜன் சிலிண்டர்களை பற்றாக்குறையும் ஏற்படுத்தியுள்ளது. எனவே மருத்துவ வல்லுநர்களின் கூற்றுப்படி மூன்றாவது அலையும் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. மேலும் நடந்தே தீரும் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது.


ஆகவே தற்போது மத்திய அரசு இந்த தொற்றுநோய்க்கு எதிராக ஒரு வலுவான செயல்முறை நடவடிக்கைகளை எடுப்பதன் கொரோனா வைரஸ் தொற்றுநோயின் மூலமாக மூன்றாவது அலை நாட்டில் நிச்சயம் வராது என்று மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் விஜயராகவன் கருத்து தெரிவித்தார்.

அதாவது நாட்டில் வலுவான நடவடிக்கைகளை எடுத்தால் நாம் மூன்றாவது அலைகளை இந்தியாவில் தடுக்க முடியும் என்றும் அவர் கூறினார். ஆகவே ஒரு நாட்டில் உள்ள அரசு தன்னுடைய மக்களை உள்ளூர் மட்டத்திலும், மாநிலங்களில் உள்ள மாவட்டங்களின் வாரியாகவும் மற்றும் கிராமங்களையும் எவ்வாறு? சரியாக வழி நடத்துகிறது என்பதை பொறுத்துதான் கொரோனா என்ற தொற்று நோய் கட்டுக்குள் வரும் என அவர் கூறினார்.


மேலும் தடுப்பூசி போடுவது குறித்து அவரிடம் அவர் தெளிவான ஒரு விளக்கத்தையும் தந்துள்ளார். அதாவது, 18 -44 வயதுக்குட்பட்டவர்களில், 11.81 லட்சம் பேருக்கு முதல் டோஸ் வழங்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார். இதுவரை, அனைத்து பிரிவுகளிலும் மொத்தம் 16.5 கோடி டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஏழு மாநிலங்களில் 50,000 முதல் ஒரு லட்சம் நோயாளிகள் சிகிச்சையில் உள்ளனர். 17 மாநிலங்களில் 50,000 க்கும் குறைவான கொரோனா நோயாளிகள் சிகிச்சையில் உள்ளனர். தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News