10, 11-ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து, அனைவரும் தேர்ச்சி - தமிழக அரசு அறிவிப்பு!
10, 11-ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து, அனைவரும் தேர்ச்சி - தமிழக அரசு அறிவிப்பு!
By : Kathir Webdesk
வரும் 15-ஆம் தேதி நடைபெற இருந்த பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்ய பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
மேலும் மாணவர்கள் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்களில் 80 சதவீதம் கணக்கிடப்படும் என்றும், வருகைப்பதிவின் அடிப்படையில் மாணவர்களுக்கு 20 சதவீதம் மதிப்பெண்கள் கணக்கிடப்படும் என்றும் அறிவிக்கபட்டுள்ளது.
பத்தாம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்று முதலமைச்சர் அறிவித்தார், மேலும் கூறியதாவது:
"மாணவர்களை நோய்த் தொற்றில் இருந்து காக்க 10ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து, மாணவர்களை நோய்த் தொற்றில் இருந்து காக்க 11ம் வகுப்பில் விடுபட்ட தேர்வுகள் ரத்து, 12-ஆம் வகுப்பை பொறுத்தவரை விடுபட்ட மாணவர்களுக்கு சூழ்நிலைக்கு ஏற்ப மறு தேர்வு பிறகு அறிவிக்கப்படும்" என முதலமைச்சர் அறிக்கையில் தெரிவிக்கபட்டுள்ளது.