10 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த முதியவர் ஜஹாங்கிர் கைது.!
10 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த முதியவர் ஜஹாங்கிர் கைது.!
By : Kathir Webdesk
மதுரையில் 10 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த 56 வயது முதியவர் ஜஹாங்கிர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது
மதுரை அரசரடி பகுதியைச் சேர்ந்தவர் 56 வயது முதியவர் ஜஹாங்கீர். இவருடைய உறவினர் வீடு அதே பகுதியில் உள்ளது. உறவினர் வீட்டிற்கு அவ்வபோது வந்து சென்ற முதியவர், அந்த வீட்டிற்கு அருகே விளையாடிக் கொண்டிருந்த 10 வயது சிறுமியை அழைத்து பலமுறை பாலியல் வன்புணர்வு சீண்டலுக்கு ஈடுபட்டுத்தியுள்ளார்.
கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு சிறுமிக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்தபோது சிறுமி நீண்ட நாட்களாக பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டது தெரிய வந்தது. பாதிக்கபட்ட சிறுமியிடம் நடத்திய விசாரணையில் பக்கத்து வீட்டிற்கு வந்த 56 வயது முதியவரான ஜஹாங்கீர் சிறுமியை அடிக்கடி யாரும் இல்லாத இடத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்புணர்வு செய்தது தெரிய வந்தது.
சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் மதுரை மாநகரத்திற்கு அனைத்து மகளிர் காவல் நிலைய காவல்துறையிர் ஜஹாங்கீர் மீது போக்சோ சட்டப் பிரிவில் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து, மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்