Kathir News
Begin typing your search above and press return to search.

டெல்லி சமய மாநாட்டில் பங்கேற்ற 1023 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது: மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு

டெல்லி சமய மாநாட்டில் பங்கேற்ற 1023 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது: மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  4 April 2020 11:51 AM GMT

டெல்லியில் தப்லிகி ஜமாத் ஏற்பாடு செய்த நிஜாமுதீன் மார்க்கஸ் சமய மாநாட்டில் அகில இந்தியா முழுவதும் இருந்து கிட்டத்தட்ட 7000 பேருக்கும் மேல் பங்கேற்றனர். இவர்களில் பலர் தங்களுக்கு கொரோனா தொற்று இருப்பதை அறிந்து தாங்களாகவே மருத்துவமனைகளில் சேர்ந்தனர்.

ஆனால் ஏராளமானோர் தங்களை மருத்துவத்துக்கு உட்படுத்திக் கொள்ளாமல் எதிர்ப்பு தெரிவித்தும், தலைமறைவாகவும் இருந்து வந்தனர். ஆனாலும் மாநில அரசுகள் அவர்களில் கிட்டத்தட்ட அனைவரையும் பிடித்து வந்து தனிமை படுத்தி பரிசோதனை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், மாநாட்டில் பங்கேற்ற 1023 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளனர், என்றும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2902-ஆக அதிகரித்துள்ளது என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News