Begin typing your search above and press return to search.
தமிழகத்தில் இன்று புதிதாக 110 பேருக்கு கொரோனா உறுதி - அடுத்தக்கட்டத்தை நெருங்குகிறதா?
தமிழகத்தில் இன்று புதிதாக 110 பேருக்கு கொரோனா உறுதி - அடுத்தக்கட்டத்தை நெருங்குகிறதா?
By : Kathir Webdesk
தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் இன்று பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். தமிழகத்தில் மேலும் 110 பேருக்கு கொரோனா பாதிப்பு இன்று உறுதியாகியுள்ளதாக அதிர்ச்சி தகவலை தெரிவித்தார். இதன்மூலம், கொரோனா தொற்று உள்ளோர் எண்ணிக்கை தற்போது தமிழகத்தில் 234 ஆக உயர்ந்துள்ளது.
இந்த 234 பேரில் 190 பேர் டெல்லியில் நடந்த இஸ்லாமிய தப்ளிகி ஜமாத் மாநாட்டில் கலந்துக் கொண்டு திரும்பியவர்கள் எனவும் தெரிவித்தார். இதில் இன்று கண்டறியப்பட்ட 110 பேரும் அடங்குவர். இதனால் தமிழகத்தில் கொரோனா தொற்று உள்ளோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுவதால், அதிர்ச்சியில் உள்ளது தமிழகம்.
Next Story