கொரோனா உயிர் எண்ணிக்கையை முன்னுக்கு பின் முரணாக கூறும் உலகநாடுகள் - கண்டனம் தெரிவித்த ஐ.நா.!
கொரோனா உயிர் எண்ணிக்கையை முன்னுக்கு பின் முரணாக கூறும் உலகநாடுகள் - கண்டனம் தெரிவித்த ஐ.நா.!
By : Kathir Webdesk
கொரோனா நோய் தொற்றின் மூலம் ஏற்பட்ட உயிர் இழப்பை பலநாடுகள் உண்மையான எண்ணிகையை அறிவிக்க தயக்கம் காட்டுகின்றனர்.
சீனாவில் கொரோனா உயிர் இழப்பு 3,869 என தொடர்ந்து உலகநாடுகளை ஏமாற்றி வந்தது குறிபிடத்தக்கது. அந்த எண்ணிகையை தொடர்ந்து அமெரிக்கா எதிர்த்து வந்தது.
அமெரிக்க அதிபர் டிரம்ப் கொரோனா உயிர் இழப்பு எண்ணிகையில் சீனா பொய் சொல்கிறது எனவே அமெரிக்கா விசாரணை நடத்தும் என அறிவித்தார்.
சீனா தற்போது எங்கள் நாட்டில் கொரோனா உயிர் இழப்பை சரியாக கணக்கிடவில்லை என சர்வ சாதரணமாக கூறியதை உலக நாடுகள் சீனாவை கிண்டல் அடித்து வருகின்றனர்.
சீனாவின் உயிர் இழப்பு அறிவிப்பு அதிர்ச்சி அளிப்பதாக உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. மேலும் ஜீனாசிஸ் புதிய நோய் தொற்று ஆய்வு பிரிவு தலைவர் மரியாவின் செய்தியாளர் சந்திப்பின் போது கொரோனா தொற்று எண்ணிக்கை மற்றும் உயிர் இழப்பு எண்ணிக்கையை கணக்கீடு செய்வது பெறும் சவாலாக இருக்கிறது.
சீனாவை தொடர்ந்து பல்வேறு நாடுகள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை மாற்றி கூறகூடும் என்கிறது உலக சுகாதார அமைப்பு.