Kathir News
Begin typing your search above and press return to search.

கொரோனா காரணத்தினால் ஆளில்லா விண்கலத்தை விண்ணுக்கு அனுப்பும் திட்டம் ஒரு ஆண்டு ஒத்திவைப்பு - இஸ்ரோ தலைவர் சிவன்.!

கொரோனா காரணத்தினால் ஆளில்லா விண்கலத்தை விண்ணுக்கு அனுப்பும் திட்டம் ஒரு ஆண்டு ஒத்திவைப்பு - இஸ்ரோ தலைவர் சிவன்.!

கொரோனா காரணத்தினால் ஆளில்லா விண்கலத்தை விண்ணுக்கு அனுப்பும் திட்டம் ஒரு ஆண்டு ஒத்திவைப்பு - இஸ்ரோ தலைவர் சிவன்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  11 Jun 2020 5:07 AM GMT

பிரதமர் மோடி அவர்கள் சென்ற 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி டெல்லி செங்கோட்டையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பேசிய போது இந்தியாவில் இருந்து விண்வெளிக்கு வீரர்கள் அனுப்பும் காகன்யான் திட்டத்தைப் பற்றி வெளியிட்டார்

இந்த திட்டத்தின் கீழ் இந்தியாவின் 75ஆவது சுதந்திர தினம்கொண்டாடும் போது, 2022ஆம் ஆண்டு விண்வெளிக்கு மூன்று அல்லது நான்கு வீரர்களை அனுப்பப்படும் என திட்டமிட்டப்பட்டது என தகவல் வெளிவந்தன. மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் இந்தியாவின் ககன்யான் திட்டத்திற்கு தேர்ந்து எடுக்கப்பட்ட நான்கு இந்திய வீரர்கள் தற்போது பயிற்சியில் உள்ளனர்.

இதற்கு முன்பு இந்த ஆண்டு ஆளில்லா விண்கலத்தை விண்ணுக்கு அனுப்பி சோதனை நடத்த திட்டமிட்டது. அதில் ஒரு ரோபோவும் அனுப்பிவைக்க இருந்தது. ஆனால், தற்போது நாடு முழுவதும் உள்ள கொரோனா வைரஸ் காரணத்தினால் இந்த ஆண்டு ஆளில்லா விண்கலத்தை விண்ணுக்கு அனுப்பும் காகன்யான் திட்டம் ஒரு ஆண்டு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டதுள்ளது.

மேலும், கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் நிதிப் பிரச்சினை காரணத்தினால் இந்த திட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என தகவல் வெளியான. இந்த ஆண்டு இறுதியில் அனுப்பப்பட இருந்த சந்திராயன்- 3 திட்டமும் ஆறு மாதத்திற்க்கு ஒத்திவைக்கப்படுகிறது என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News