செவ்வாய் கிரகத்தில் எலும்பு துண்டுகள்- இது நாள் வரை மறைத்த நாசா? உண்மை என்ன?
செவ்வாய் கிரகத்தில் எலும்பு துண்டுகள்- இது நாள் வரை மறைத்த நாசா? உண்மை என்ன?
By : Kathir Webdesk
நம்ம ஊரில் மக்களின் வரி பணத்தில் ஊதியம் பெரும்அரசு அதிகாரிகளிடம் அரசின் திட்டங்கள் நிதி ஒதுக்கீடு தகவல் கேட்டால் குண்டர்களை ஏவி தாக்குவர் ஆனால் அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து தகவல் பெரும் சட்டம் மூலம் தகவலை கேட்டு பெறுள்ளார். நாசா ஆய்வு நிறுவனம் செவ்வாய் கிரகத்தில் எடுத்த புகைப்படங்கள் மற்றும் மனிதனை ஒத்த உருவ எலும்புகள் குறித்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவின் நாசா விண்வெளி நிலையம் , செவ்வாய் கிரகத்திற்கு ஒரு செயற்கை கோளை அனுப்பியது அதன் உதவியுடன் செய்வாய் கிரகத்தில் செயற்கைகோள் கலன் ஒன்றை தரை இறக்கியது. செயற்கைகோளில் இருந்த ரோவர் எனப்படும் சிறிய கார் ஒன்று, செய்வாய் மண்ணில் ஊர்ந்து சென்று, நிலப்பரப்பின் பல புகைப்படங்களை எடுத்து பூமிக்கு அனுப்பியது.
இந்த புகைப்படங்களில் 90% சதவிதமான படங்களை நாசா இதுவரை வெளியிடவில்லை. 10% சதவிகிதமான புகைப்படங்களை மட்டுமே அவர்கள் வெளியிட்டார்கள். தகவல் அறியும் சட்டம் மூலம் பெறப்பட்ட தகவல் மூலம் வெளிச்சத்திற்கு வந்த செவ்வாய் கிரக உண்மை. ஒரு விஞ்ஞானி கொடுத்த கடும் அழுத்தம் காரணமாகவே, மனித எலும்புகள் கிடக்கும் ஒரு புகைப்படத்தை நாசா தற்போது வெளியிட்டுள்ளது.
அந்த புகைப்படத்தில் மனித கை எலும்பை ஒத்த ஒரு பொருள் மண்ணில் இருப்பது தெளிவாக தெரிகிறது. செய்வாய் கிரகத்தில் ஒரு காலத்தில் உயிரினம் வாந்ததாக கூறப்படுவது, உண்மை என்று நிரூபிக்க இதுவே போதுமானது என்று குறித்த விஞ்ஞானி தெரிவித்துள்ளார். எமது சூரியனை சுற்றி பல கிரகங்கள் இருந்தாலும், பல விஞ்ஞானிகள் செய்வாய் தொடர்பாக ஆராய்வது ஏன் என்ற கேள்வி பல வருடங்களா இருந்து வருகிறது. பலர் இதன் உண்மைகளை மறைத்து வருவதாகவும் கூறப்படுகிறது.