Kathir News
Begin typing your search above and press return to search.

தற்போது இருக்கும் பீல்டர்களில் ஜடேஜா தான் சிறந்தவர் - ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித் பாராட்டு!

தற்போது இருக்கும் பீல்டர்களில் ஜடேஜா தான் சிறந்தவர் - ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித் பாராட்டு!

தற்போது இருக்கும் பீல்டர்களில் ஜடேஜா தான் சிறந்தவர் -  ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித் பாராட்டு!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  16 Jun 2020 12:02 PM GMT

தற்போது இருக்கும் பில்டர்களில் சிறப்பாக திகழ்பவர் இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ஜடேஜா என ஆஸ்திரேலிய அணியின் பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியது: இங்கிலாந்து நாட்டில் ஆஷஸ் தொடரில் விளையாடுவதை விட இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் போட்டியில் விளையாட தான் சிறப்பானது மற்றும் எனக்கு மிகவும் பிடிக்கும். ஐபிஎல் போட்டியில் உலகின் சிறந்த வீரர்களுடனும் மற்றும் வீரர்களுக்கு எதிராக விளையாட முடியும்.

இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ஜடேஜா பில்டிங்கில் சிறப்பாகவும், வேகமாகவும் செயல்படுவார். தற்போது இருக்கும் பில்டர்களில் இவர் சிறந்தவர். இந்திய அணியின் இளம் வீரரான லோகேஷ் ராகுல் சிறப்பாக விளையாடி வருகிறார். இந்திய அணியின் கேப்டன் மற்றும் சிறந்த பேட்ஸ்மேன் விராட் கோலி மிகவும் குறும்பு செய்பவர்.


இந்தியா அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ் டோனி ஜாம்பவனாக உள்ளார். இவரை மிஸ்டர் கூல் எனவும் அழைக்கலாம் மற்றும் முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் ஒரு ஜென்டில்மேன்.

இவ்வாறு ஸ்டீவ் ஸ்மித் கூறியுள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News