Kathir News
Begin typing your search above and press return to search.

புதுச்சேரி: மருத்துவமனையிலிருந்து தப்பிய குற்றவாளிக்கு கொரோனா- தனிமைப்படுத்தப்பட்ட காவலர்கள்!

புதுச்சேரி: மருத்துவமனையிலிருந்து தப்பிய குற்றவாளிக்கு கொரோனா- தனிமைப்படுத்தப்பட்ட காவலர்கள்!

புதுச்சேரி: மருத்துவமனையிலிருந்து தப்பிய குற்றவாளிக்கு கொரோனா- தனிமைப்படுத்தப்பட்ட காவலர்கள்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  21 Jun 2020 9:10 AM GMT

புதுச்சேரி, முதலியார்பேட்டை காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட அரியாங்குப்பம் பகுதியை சேர்ந்த ரமணா (27) வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட குற்றவாளியை கொரோனா பரிசோதனைக்காக கதிர்காமத்தில் உள்ள அரசு கோவிட் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். பரிசோதனை முடிந்து கழிவறைக்கு சென்று வருவதாக கூறி குற்றவாளி தப்பியோடிவிட்டான்.

இந்நிலையில் கைதிக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனை முடிவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து தப்பியோடிய கைதியை 3 தனிப்படை அமைத்து போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதேபோல் தப்பியோடிய கைதியை கைது செய்த காவலர்கள் மற்றும் பணியில் இருந்த போலீசார் என 6 காவலர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News