Kathir News
Begin typing your search above and press return to search.

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கொரோனா பாதிப்பு இல்லை - அமைச்சர் விஜயபாஸ்கர்!

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கொரோனா பாதிப்பு இல்லை - அமைச்சர் விஜயபாஸ்கர்!

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கொரோனா பாதிப்பு இல்லை - அமைச்சர் விஜயபாஸ்கர்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  22 Jun 2020 3:02 PM GMT

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை நெகடிவ் வந்துள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நிருபர்களிடம் பேசியது: "கண்ணுக்குத் தெரியாத கொடிய கொரோனா வைரஸை எதிர்த்து போராடி வருகின்றோம். கொரோனா பரிசோதனையை அதிகமாக செய்வது தான் தமிழக அரசுக்கு முக்கியமானது. ஐசிஎம்ஆர் அனுமதியுடன் 87 பரிசோதனை மையங்கள் தமிழ்நாட்டில் உள்ளது. இதனைக் கொண்டு இந்தியா அளவில் அதிகமாக 30,000 பரிசோதனையை செய்வதற்கு எட்டியுள்ளோம். இதுவரை 9,19,204 கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று ஒரே நாளில் 1,358 பேர் குணமாகி உள்ளனர். இதனால் குணம் அடைபவர்களின் எண்ணிக்கை 34,112 ஆக உயர்ந்துள்ளது. அதன் விகிதம் 55 சதவீதமாக உள்ளது. கொரோனா ஒழிப்பது பற்றி கடலுக்கு தான் தெரியும் என முதலமைச்சர் கூறியது சாதாரணமான கருத்து தான். அந்த கருத்துக்கு எதற்காக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கோபம் அடைகிறார். தேவையில்லாத குற்றச்சாட்டுகளை முன்வைக்கக் கூடாது. பின்னர் தமிழ்நாடு பிளாஸ்மா சிகிச்சையில் வெற்றியை கண்டுள்ளது.

இந்நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா இல்லை என வந்துள்ளது. சென்னை மருத்துவக் கல்லூரி டீன் மற்றும் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை டீன் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழக அரசு கொரோனாவை பற்றி அனைத்து விஷயங்களை வெளிப்படையாக தெரிவித்து வருகிறது."

இவ்வாறு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News