Kathir News
Begin typing your search above and press return to search.

புதுச்சேரி : டீக்கடைகளுக்கு சீல் வைக்கப்படும் - முதலமைச்சர் நாராயணசாமி எச்சரிக்கை.!

புதுச்சேரி : டீக்கடைகளுக்கு சீல் வைக்கப்படும் - முதலமைச்சர் நாராயணசாமி எச்சரிக்கை.!

புதுச்சேரி : டீக்கடைகளுக்கு சீல் வைக்கப்படும் - முதலமைச்சர் நாராயணசாமி எச்சரிக்கை.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  23 Jun 2020 12:59 PM GMT

புதுச்சேரி மாநில முதலமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களை சந்தித்ததார், புதுச்சேரியில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், வரும் 2 ஆம் தேதி வரை கடைகள், வியாபார நிறுவனங்கள், பெட்ரோல் பங்குகள் உள்ளிட்டவைகள் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை திறக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. இதனை முழுமையாக கடைபிடிக்க வேண்டும்.

டீக்கடைகளில் கூட்டமாக நின்று கொண்டு டீ குடிப்பதாக எங்களுக்கு தொடர்ந்து புகார்கள் வருகிறது. அவ்வாறு விதிமுறைகளை கடைபிடிக்காத டீ கடைகளுக்கு வருவாய்த்துறை அதிகாரிகள் சென்று வீடியோ பதிவு செய்து, சீல் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல் கடைகளிலும் தனிமனித இடைவெளி கடைபிடிப்பதில்லை, முகக்கவசம் அணிவதில்லை என்ற புகார்கள் வருகிறது. அவ்வாறு இருந்தால் அந்த கடையின் உரிமையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். கடைகளுக்கும் சீல் வைக்கப்படும்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News