Kathir News
Begin typing your search above and press return to search.

பீட்டர் பாலின் முதல் மனைவி காவல் நிலையத்தில் புகார் - வனிதா காட்டம்.!

பீட்டர் பாலின் முதல் மனைவி காவல் நிலையத்தில் புகார் - வனிதா காட்டம்.!

பீட்டர் பாலின் முதல் மனைவி காவல் நிலையத்தில் புகார் -  வனிதா காட்டம்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  28 Jun 2020 11:48 AM GMT

நடிகை வனிதா விஜயகுமார் பீட்டர் பால் என்பவரை நேற்று கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்துகொண்டார். இந்த திருமணம் வனிதாவின் வீட்டில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

தற்போது பீட்டர் பீர்பாலின் முதல் மனைவியான எலிசபெத் ஹலன் சென்னையில் வடபழனி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரில் பீட்டர் பாலுடன் எனக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். எனக்கு சட்டரீதியாக விவாகரத்து கொடுக்காமல் வனிதாவை திருமணம் செய்து கொண்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் கொடுத்துள்ளார்.

இதனைப் பற்றி வனிதா விஜயகுமாரிடம் கேட்டபோது: நான் எதிர்பார்த்து தான். எட்டு வருடங்களுக்கு முன்பே பீட்டர் எலிசபெத்தை பிரிந்து வந்துவிட்டார். எங்கள் திருமணம் பற்றி அவருக்கு தெரியும். இது பணம் புடுங்குவதற்கு புகார் அளித்துள்ளார். எங்களிடம் ரூபாய் ஒரு கோடி பணம் கேட்டு பிளாக்மெயில் செய்து வருகிறார். ஆனால், இதனை சட்டரீதியாக எதிர் கொள்வதற்கு தயாராக உள்ளோம்.

பீட்டர் பால் மிக நல்லவர். நமக்கு புகழ் வரும் சமயத்தில் பிரச்சனைகள் வருவது சாதாரணம் தான். சினிமாவில் இருக்கும் சமயத்தில் இப்பிடிப்பட்ட பல விஷயங்களைப் பார்த்து இருக்கிறேன். நாங்கள் சந்தோஷமாக இருக்கிறோம்.

இவ்வாறு வனிதா விஜயகுமார் கூறியுள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News