'ஜெய் ஸ்ரீராம்' கோஷத்தின் உண்மை நிலை : தற்கொலைக்கு முயன்ற இஸ்லாம் மத சிறுவனை வைத்து அரசியல் நாடகம் ஆடிய ஊடகங்கள்.!
'ஜெய் ஸ்ரீராம்' கோஷத்தின் உண்மை நிலை : தற்கொலைக்கு முயன்ற இஸ்லாம் மத சிறுவனை வைத்து அரசியல் நாடகம் ஆடிய ஊடகங்கள்.!
By : Kathir Webdesk
உத்தர பிரதேசத்தின் சந்தாலி மாவட்டத்தில் 'ஜெய் ஸ்ரீராம்' என சொல்லச் சொல்லி வற்புறுத்தி 17 வயதுடைய இஸ்லாமிய சிறுவன் கடத்தப்பட்டு அச்சிறுவன் மீது தீ வைத்ததாக ஊடகங்கள் முந்திக்கொண்டு போலி செய்தி வெளியிட்டு வருகின்றன. அதில் என்ன நடந்தது என்பதை பற்றி விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.
தீ காயத்தால் பாதிக்கப்பட்ட அச்சிறுவன் 60% தீக்காயங்களுடன் வாரணாசியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளான். இது தொடர்பாக பேசிய அச்சிறுவன், தன்னை 4 பேர் கொண்ட கும்பல் கடத்தி ஜெய் ஸ்ரீராம் என கோஷமிடச் சொல்லி கட்டாயப்படுத்தினர். அதற்கு மறுத்ததால் என் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்தனர் என வாக்குமூலம் அளித்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
இதனை மறுத்துள்ள போலீஸ் தரப்பு, சிறுவன் முன்னுக்குப் பின் முரணாக பேசுகிறான் எனவும், சிறுவன் குறிப்பிட்ட மகாராஜ்பூர் மற்றும் ஹாதீஜா ஆகிய இரண்டு இடங்களும் வெவ்வேறு பகுதியில் உள்ளதாகவும், தனக்கு தானே அவன் தீ வைத்து தற்கொலைக்கு முயன்றதாகவும் தெரிவித்துள்ளனர். இதனை திரித்த ஊடகங்கள் ஜெய் ஸ்ரீராம் என்று கோஷமிட சொன்னதால் தீ வைக்கப்பட்டதாக செய்தி வெளியிட்டு வருகின்றன.