சச்சின் பைலட் மற்றும் 18 எம்எல்ஏக்கள் மீது தீர்ப்பு வரும் வரை எந்த நடவடிக்கையும் எடுக்க சபாநாயகருக்கு ஐகோர்ட் தடை....!!!
சச்சின் பைலட் மற்றும் 18 எம்எல்ஏக்கள் மீது தீர்ப்பு வரும் வரை எந்த நடவடிக்கையும் எடுக்க சபாநாயகருக்கு ஐகோர்ட் தடை....!!!
By : Kathir Webdesk
காங்கிரஸ் ஆட்சி செய்யும் ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் அசோக் கெலாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட் போர்க்கொடி தூக்கினார். இதனால் அவரது துணை முதல்வர் மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர் பறிக்கப்பட்டது.
மேலும் சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 18 பேரையும் கட்சி தாவல் தடைச் சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்யும்படி சபாநாயகரிடம் காங்கிரஸ் சட்டப் பேரவை கொறடா புகார் அளித்ததன் பேரில், இவர்கள் 19 பேருக்கும் விளக்கம் கேட்டு சபாநாயகர் சி.பி.ஜோஷி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டாா்.
இதனையடுத்து சபாநாயகர் நடவடிக்கைக்கு எதிராக 18 எம்எல்ஏக்கள் ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். நடவடிக்கைக்கு எதிராக விசாரித்த நீதிமன்றம் இந்த வழக்கு விவகாரம் தொடர்பாக ஜூலை 24ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவித்தது. அதுவரையில் பைலட் உட்பட 18 பேரின் மீதும் எந்த நடவடிக்கையும் சபாநாயகர் எடுக்கக்கூடாது என்று உத்தரவிட்டது.
இந்நிலையில்உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சபாநாயகர் சி.பி.ஜோஷி மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். இந்நிலையில் பைலட் மற்றும் 18 எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் எதிராக தொடர்ந்த வழக்கில் ராஜஸ்தான் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பிரகாஷ் குமார் முன்னிலையில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது ஏற்கனவே அறிவித்தபடி நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.மேலும் இதுதொடர்பாக விளக்கம் அளிக்க சபாநாயகருக்கு நோட்டீஸ் அனுப்பப்படுகிறது. தீர்ப்பு வழங்கப்படும் வரை தற்போதைய தீர்ப்பு தொடர்ந்து நீடிக்கும் என்று அறிவித்தனர்.
உயர் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு பைலட் உள்ளிட்ட எம்எல்ஏக்களுக்கு நிம்மதியை அளித்துள்ளது. அதே நேரத்தில் முதல்வர் அசோக் கெலாட்டிற்கு பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது.