Begin typing your search above and press return to search.
'அஞ்சாதே 2' இயக்கும் மிஸ்கின் - நாயகன் யார் தெரியுமா?
'அஞ்சாதே 2' இயக்கும் மிஸ்கின் - நாயகன் யார் தெரியுமா?

By :
சிம்பு நடிக்கும் படத்தினை இயக்கவிருக்கும் மிஸ்கின் அதற்கு முன்னர் வேறு ஒரு படம் இயக்கவிருப்பதைப் பற்றி நாம் செய்தி வெளியிட்டிருந்தது நினைவிருக்கலாம். தற்போது அது குறித்த தகவல் கிடைத்துள்ளது.
2008ம் ஆண்டு மிஸ்கின் இயக்கத்தில் நரேன், பிரசன்னா நடிப்பில் வெளியான படம் 'அஞ்சாதே'. நெமிசந்த் ஜபக் தயாரிப்பு நிறுவனம் சார்பில் உருவான அப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.
தற்போது மீண்டும் நெமிசந்த் ஜபக் நிறுவனத்திற்கு 'அஞ்சாதே' படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி தர ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளாராம் மிஸ்கின். இப்படத்தினில் நாயகனான நடிக்க அருண் வஜயை அணுகியிருக்கிறார்களாம். அவருக்கும் கதை பிடித்துப் போக முன்னுரிமை கொடுத்து நடித்துக் கொடுப்பதாக உறுதியளித்திருக்கிறாராம்.
Next Story