சண்டைக்குப் பிறகு மிஷ்கின் மீண்டும் துப்பறிவாளன் 2வை இயக்குகிறாரா?
சண்டைக்குப் பிறகு மிஷ்கின் மீண்டும் துப்பறிவாளன் 2வை இயக்குகிறாரா?
By : Kathir Webdesk
துப்பறிவாளன் வெற்றியைத் தொடர்ந்து துப்பறிவாளன்-2 இயக்கிக் கொண்டிருந்தார்.மிஷ்கின் இவர் அதிரடியாக சில கண்டிஷன்கள் போட்டதால் அவரை படத்தில் இருந்து தூக்கி விட்டார் விஷால். லண்டனில் பாதி படம் முடிவடைந்த நிலையில் 13 கண்டிஷன்கள் மேலும் 5 கோடி சம்பளம் கேட்டதை அடுத்து படத்தில் இருந்து உடனடியாக நீக்கி விட்டார் இதை அடுத்து மிஷ்கின் கண்ணாமூச்சி என்கிற வெப்சீரிஸ் நிகழ்ச்சியில் மிஸ்கின் துப்பறிவாளன் படத்திலிருந்து விஷால் தன்னை நீக்கி விட்டதாக கூறினார்.
லாக்டவுன் காரணமாக படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டிருக்கும் நிலையில், மிஷ்கின் மற்றும் விஷால் இடையே சமீபத்தில் பேச்சுவார்த்தை நடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனால் சிலர் இருவருக்கிடையே பேச்சுவார்த்தை எதுவும் இல்லை என்றும் இது வெறும் வதந்தி என்றும் குறிப்பிட்டுள்ளனர். லாக்டவுன் காரணமாக சிலர் இவ்வாறு பரப்பிவிட்டு இருக்கின்றனர். இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த ஒரு அறிவிப்பும் வரவில்லை வரும் வரை காத்திருப்போம் என கூறியுள்ளனர்.