பாகிஸ்தான் ஒரு அணு குண்டைப் போட்டால், பதிலுக்கு இந்தியா 20 குண்டுகள் போட்டு கதையை முடித்து விடும்! பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முசாரஃப் !
பாகிஸ்தான் ஒரு அணு குண்டைப் போட்டால், பதிலுக்கு இந்தியா 20 குண்டுகள் போட்டு கதையை முடித்து விடும்! பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முசாரஃப் !
By : Kathir Webdesk
பாகிஸ்தான் ஒரு அணு குண்டைப் போட்டால், இந்தியா 20 குண்டுகள் போட்டு நம்மை முடித்துக்கட்டிவிடும் என பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முசாரஃப் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இந்தியா-பாகிஸ்தான் இடையேயான உறவு மீண்டும் அபாயகரமான கட்டத்தை எட்டியுள்ளதாகக் கூறினார். பாகிஸ்தான் முதலில் ஒரு அணுகுண்டை அண்டை நாட்டின் மீது போட்டால், இந்தியா 20 குண்டுகள் போட்டு மொத்தமாக நம்கதை முடித்துவிடும் என கருத்து தெரிவித்துள்ளார்.
எனவே இதற்கு ஒரே தீர்வு பாகிஸ்தான் முதலில் 50 அணு குண்டைப் போட்டு தாக்குதல் நடத்தினால், அவர்களால் 20 குண்டுகளைப் போட்டு பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த முடியாது என கருத்து தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் முதலில் 50 அணுகுண்டுகளைப் போடத் தயாரா? என்றும் அவர் விஷமத்தனமாகவும், பாகிஸ்தானை கேலி செய்யும் விதமாகவும் கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார்.