Kathir News
Begin typing your search above and press return to search.

புதுச்சேரி : புதிய உச்சம் - ஒரே நாளில் 200 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி.!

புதுச்சேரி : புதிய உச்சம் - ஒரே நாளில் 200 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி.!

புதுச்சேரி : புதிய உச்சம் - ஒரே நாளில் 200 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  3 Aug 2020 4:01 AM GMT

புதுச்சேரி மாநிலத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கடந்த ௨௪ மணி நேரத்தில் மாநிலத்தில் 200 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுல் புதுச்சேரியை சேர்ந்த 161 நபர்களுக்கும், காரைக்காலை சேர்ந்த 7 நபர்களுக்கும், ஏனாம் பிராந்தியத்தை சேர்ந்த 32 நபர்களுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


மேலும் தற்போது 1445 நபர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 2309 நபர்கள் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதேபோல் புதுச்சேரியில் நேற்று ஒருவர் கொரோனா தொற்றால் உயிரிழந்ததை அடுத்து மாநிலத்தில் கொரனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 52 ஆக உயர்ந்துள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3806 ஆக உயர்ந்துள்ளது.


புதுச்சேரி மாநிலத்தில் அதிகபட்சமாக ஒரே நாளில் ௧௭௪ நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று அதிகப்படியாக ௨௦௦ நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News