Begin typing your search above and press return to search.
ஊரடங்கு உத்தரவை மீறி புதுச்சேரியில் செயல்பட்ட 22 மதுக் கடைகளுக்கு சீல்!
ஊரடங்கு உத்தரவை மீறி புதுச்சேரியில் செயல்பட்ட 22 மதுக் கடைகளுக்கு சீல்!
By : Kathir Webdesk
புதுச்சேரியில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால், அனைத்து மதுக் கடைகளையும் மூட அரசு உத்தரவிட்டிருந்தது. இருப்பினும், சிலர் சட்ட விரோதமாக மதுக் கடைகளைத் திறந்து மதுபானங்களை விற்பனை செய்தது தெரிய வந்தது. இந்தக் கடைகளின் மீது நடவடிக்கை எடுக்க ஆளுநர் கிரண் பேடி, துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அதன்படி, கடந்த இரண்டு தினங்களில் 14 மதுக் கடைகள், 7 சாராயக் கடைகள், ஒரு கள்ளுக்கடை ஆகிய 14 கடைகளுக்கு 'சீல்' வைக்கப்பட்டது.
ஆக மொத்தம் 22 கடைகளுக்கு சீல் வைத்துள்ள அதிகாரிகள், கடைகளின் உரிமத்தையும் ரத்து செய்துள்ளனர்.
Next Story