நானெல்லாம் வர முடியாது.. என் வக்கீல் வருவார் - பல முறை கோர்ட்டுக்கு டிமிக்கி காட்டிய ஸ்டாலின் : 3 அவதூறு வழக்குகளை எதிர்கொள்ளும் பின்னணி!
நானெல்லாம் வர முடியாது.. என் வக்கீல் வருவார் - பல முறை கோர்ட்டுக்கு டிமிக்கி காட்டிய ஸ்டாலின் : 3 அவதூறு வழக்குகளை எதிர்கொள்ளும் பின்னணி!

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எதிரான 3 அவதூறு வழக்குகளை வருகிற ஏப்ரல் 8 ஆம் தேதிக்கு தள்ளி வைத்து செசன்சு நீதிமன்றம் உத்தரவிட்டது.
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக திமுக மகளிர் அணியினர் நடத்திய கோலம் போடும் போராட்டம் தொடர்பாக அக் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டார். இதையடுத்து அவர் மீது தமிழக அரசு சார்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது.
அதேபோல, முதலமைச்சர் குறித்தும், உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குறித்தும் மு.க.ஸ்டா லின் கருத்து தெரிவித்து பேட்டி கொடுத்தார் என்றும் அவர் மீது இரு அவதூறு வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த 3 வழக்குகளின் விசாரணை நீதிபதி செல்வக்குமார் முன்பு புதனன்று (மார்ச்4) விசாரணைக்கு வந்தது. இந்த வழக்குகளின் விசாரணைக்காக மு.க. ஸ்டாலின் நேரில் ஆஜராக ஏற்கனவே உத்தரவிடப்பட்டிருந்தது. அதே நேரம், இந்த வழக்குகளை ரத்து செய்ய சென்னை உயர்நீதி மன்றத்தில் மு.க.ஸ்டாலின் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இதனால், சென்னை செசன்சு கோர்ட்டில் விசார ணைக்கு வந்த 3 அவதூறு வழக்குகளின் விசாரணைக்கு அவர் நேரில் ஆஜராக வில்லை. மு.க.ஸ்டாலின் சார்பில் அவரது வழக்கறிஞர் குமரேசன் ஆஜராகி, நேரில் ஆஜராக ஸ்டாலினுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்தார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி செல்வக் குமார், விசாரணையை வருகிற ஏப்ரல் 8 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.