Kathir News
Begin typing your search above and press return to search.

தேனியில் சுடுகாட்டையும் சுற்றி வளைத்து அபகரித்த தி.மு.க நிர்வாகி - 300 மது பாட்டிலை அடுக்கி வைத்து விற்பனை அமோகம்!

தேனியில் சுடுகாட்டையும் சுற்றி வளைத்து அபகரித்த தி.மு.க நிர்வாகி - 300 மது பாட்டிலை அடுக்கி வைத்து விற்பனை அமோகம்!

தேனியில் சுடுகாட்டையும் சுற்றி வளைத்து அபகரித்த தி.மு.க நிர்வாகி - 300 மது பாட்டிலை அடுக்கி வைத்து விற்பனை அமோகம்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  27 July 2020 3:26 AM GMT

சுடுகாட்டில் மது பாட்டில்களை அடுக்கி வைத்து முறைகேடாக மது விற்பனை செய்யப்படுவதாக தேனி பெரியகுளம் காவல் துறையினருக்கு இரகசிய தகவல் வந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து பெரியகுளம் டி.எஸ்.பி. ஆறுமுகம் தலைமையில், இன்ஸ்பெக்டர் குருவெங்கடேஷ் ஆகியோர் தேவதானப்பட்டி முருகமலை ரோட்டில் ரோந்து சென்றனர்.

அப்போது அங்குள்ள சுடுகாட்டில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 300 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக தேவதானப்பட்டி தி.மு.க., நகர பொறுப்பாளர் திலகர் ராஜா என்ற 40வயதான நபரையும், இ. புதுப்பட்டியை சேர்ந்த முருகன் என்ற 45வயதான, நபரையும் கைது செய்தனர்.

திமுக கட்சிக்கு என்று நில அபகரிப்பு வரலாறு இருந்து வரும் நிலையில், உச்சகட்டமாக சுடுகாட்டையும் ஆக்கிரமித்து மது விற்பனை கூடமாக மாற்றியுள்ளது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News