வேலை வாங்கித்தருவதாக கூறி 300 பேரிடம் மோசடி! பிரின்ஸ் டேனியல் மற்றும் அவரது மனைவி மீது கோவை கலெக்டரிடம் புகார்!!
வேலை வாங்கித்தருவதாக கூறி 300 பேரிடம் மோசடி! பிரின்ஸ் டேனியல் மற்றும் அவரது மனைவி மீது கோவை கலெக்டரிடம் புகார்!!
By : Kathir Webdesk
வெளிநாடுகளில் வேலைவாங்கித் தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்ட கோவை கிறிஸ்தவ தம்பதி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாதிக்கப்பட்டவர்கள், கோவை கலெக்டரிடம் புகார் மனு அளித்தனர்.
கோவை கணபதி பகுதியில் கேய்டின்ஸ் வேலைவாய்ப்பு மையம் என்ற நிறுவனத்தை பிரின்ஸ் டேனியல் மற்றும் அவரது மனைவி கரிஷ்மா டேனியல் ஆகியோர் நடத்தி வந்துள்ளனர்.
இவர்கள், மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளில் அதிக சம்பளத்தில் வேலை வாங்கித்தருவதாக விளம்பரப்படுத்தினர். இதனைத்தொடர்ந்து, ஏராளமானோர் வேலைக்கு விண்ணப்பித்துள்ளனர். ஒவ்வொருவரிடமும் தலா ரூ.2 லட்சம் வரை பணத்தை வாங்கிக் கொண்டு வேலை வாங்கி தராமல், இழுத்தடிப்பு செய்துள்ளனர்.
இதனால், சந்தேகம் அடைந்த பணம் செலுத்தியவர்கள், பிரின்ஸ் டேனியலை அணுகி பணத்தை திருப்பிக் கேட்டபோது, “வெளிநாடுகளில் வேலை கிடைக்க முன்பணமாகச் செலுத்தி விட்டதாகவும், பணமெல்லாம் திருப்பிக் கொடுக்க முடியாது” என்றும் கூறியுள்ளார். மேலும், “நான் நீலகிரி மாவட்ட ரஜினிகாந்த் மன்ற இளைஞர் அணி துணை செயலாளராக உள்ளேன். எனக்கு அரசியல் செல்வாக்கு உள்ளது” என்று கூறி பணம் செலுத்தியவர்களை மிரட்டியுள்ளார்.
இது குறித்து கோவை கலெக்டரிடம் புகார் மனு அளித்தவர்கள் கூறும்போது, “இதேபோன்ற வேலைவாய்ப்பு நிறுவனத்தை பிரின்ஸ் டேனியல் நீலகிரியிலும் நடத்தி வந்தார். தற்போது, அதுவும் மூடப்பட்டுள்ளது. இது குறித்து காவல்துறையினரிடம் பலமுறை புகார் மனு அளித்தும், எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்ல வேண்டும் என 300-க்கும் மேற்பட்டோர் பணம் செலுத்தி உள்ளோம். இதன் மூலம் அவர்கள், சுமார் 6 கோடி ரூபாய் வரை மோசடி செய்துள்ளனர். நாங்கள் கஸ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை கொடுத்துள்ளோம். அதை கலெக்டர்தான் வாங்கித்தர வேண்டும்” என்று சோகத்துடன் குறிப்பிட்டனர்.