Kathir News
Begin typing your search above and press return to search.

தலைமறைவான நிஜாமுதீன் தலைவர் இருக்கும் இடம் தெரிந்தது : 36 கேள்விகளுடன் நெருங்கும் விசாரணை அதிகாரிகள்.

தலைமறைவான நிஜாமுதீன் தலைவர் இருக்கும் இடம் தெரிந்தது : 36 கேள்விகளுடன் நெருங்கும் விசாரணை அதிகாரிகள்.

தலைமறைவான நிஜாமுதீன் தலைவர் இருக்கும் இடம் தெரிந்தது : 36 கேள்விகளுடன் நெருங்கும் விசாரணை அதிகாரிகள்.

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  9 April 2020 3:24 AM GMT

டெல்லியில் எச்சரிக்கை மற்றும் தடைகளை மீறி சென்ற மாதம் சமய பிரச்சார மாநாடு நடத்தியவர் நிஜாமுதீன் தலைவர் மார்கஸ் மவுலானா சாத் கண்டால்வி. இவர் நடத்திய மாநாட்டில் பங்கேற்ற ஆயிரக்கணக்கனோருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. இதனால் இவர்களிடமிருந்து தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்கிற அச்சத்தில் கிட்டத்தட்ட இந்தியாவில் 25,000 பேர் சுகாதாரத்துறையால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதனால் பீதியும் பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் இதற்கு காரணமான நிஜாமுதீன் தலைவர் மார்கஸ் மவுலானா மீது தடையை மீறியது, எச்சரிக்கைகளை கடைபிடிக்காதது, தொற்று நோயை பரவசெய்தது ஆகிய குற்றங்களின் பேரில் டெல்லி அரசு பல்வேறு குற்ற பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தது. ஆனால் போலீசார் சென்று இவரை பிடிப்பதற்குள் தலைமறைவானார் என கூறப்பட்டது.

இப்போது அவர் டெல்லி அருகே உள்ள ஜாகிர் நகர் பகுதியில் உள்ள தனது பண்ணை வீட்டில் தன்னை தனிமைப்படுத்தியுள்ளார் என தகவல் கிடைத்ததும் டெல்லி காவல் துறையினர் அவரிடம் நேரில் விசாரிக்க திட்டமிட்டனர். ஆனால் நிஜாமின் வக்கீல்கள் அவர் தனிமைப்படுத்தலில் உள்ளார், சில நாட்கள் கழித்து விசாரணைக்கு ஒத்துழைப்பார் என்று கூறியுள்ளனர்.

இந்த நிலையில் அவருடைய வீட்டுக்கு போலீசார் 2 நோட்டீஸ்கள் அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. முதல் நோட்டீசுக்கு பதில் இல்லை. 2 வது நோட்டீசுக்குதான் வக்கீல்கள் மூலம் பதில் அனுப்பப்பட்டுள்ளது. இந்த நிலையில் விசாரணை அதிகாரிகள் மாநாடு நடத்துவதற்காக பெற்ற நிதி ஆதாரங்கள், இதன் பின்னால் உள்ள பன்னாட்டு பின்னணி விவரங்கள், மாநாட்டின் உண்மை நோக்கங்கள் என்ன என்பது குறித்து 36 கேள்விகள் கொண்ட பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

https://www.opindia.com/2020/04/delhi-police-trace-nizamuddin-markaz-chief-maulana-saad/

Next Story
கதிர் தொகுப்பு
Trending News